மேட்டூர் அணை – இந்த ஆண்டில் 6வது முறையாக நிரம்பியது!
சேலம் மாவட்டத்தில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். தமிழக விவசாயத்திற்கு உயிர் ஊற்றாக திகழும் இந்த அணை, நடப்பாண்டில் ஆறாவது முறையாக நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். சமீப நாட்களில் தமிழக – கர்நாடகா எல்லை மலைப்பகுதிகளில் பரவலாக பெய்த மழையால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகியது. இதன் விளைவாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது.
இன்று காலை 6வது முறையாக மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவையும் எட்டியது. அணைக்கு வரும் நீர்வரத்து 31,854 கனஅடியில் இருந்து 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் சேமிக்கப்பட்ட நீர் அளவு உச்சத்தை எட்டிய நிலையில், 23,300 கனஅடி நீர் டெல்டா பாசனப்பகுதி மற்றும் கால்வாய்களில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணை நிரம்பிய நிலையில், தா...









