பிரதமர் மோடி: மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வலியுறுத்தல்.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்க, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர அணுகுமுறைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேற்கு ஆசியாவில் தொடர்ந்து வரும் மோதல் குறித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, இப்பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கும்போது, "மோதலைத் தணிப்பது மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஆகிய விவகாரங்களை இந்தியா முன்னிறுத்தியுள்ளது," என்று கூறினார்.
மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும் தான் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் வாயிலாக இப்பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதே இந்தியாவின் குறிக்கோள் என்று பிரதமர் மோடி கூறினா...









