Saturday, May 9பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஐரோப்பா தினக் கொண்டாட்டங்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

புது தில்லியில் நடைபெற்ற ஐரோப்பா தினக் கொண்டாட்டங்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் புது தில்லியில் நடைபெற்ற 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு, இரு நாடுகளுக்கும் இடையேயான மூலோபாயக் கூட்டாண்மைக்கு ஒரு தீர்க்கமான புதிய உத்வேகத்தை அளித்து, அதை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

நேற்று புது தில்லியில் நடைபெற்ற ஐரோப்பா தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டின் முடிவுகள், இரு நாடுகளின் உறவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டத்தைக் குறிக்கின்றன என்று திருமதி சீதாராமன் கூறினார்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தது, பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கூட்டாண்மையில் கையெழுத்திட்டது, மற்றும் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான விரிவான கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகியவை இணைந்து இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “2030-ஐ நோக்கி: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கூட்டு விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல்” என்ற கூட்டு செயல் திட்டம், வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கு ஒரு தெளிவான மற்றும் லட்சியமான தொலைநோக்குப் பார்வையை வழங்குகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஹெர்வே டெல்பினும் உடனிருந்தார்.