கோழிக்கோடு மருத்துவமனை தீ விபத்து: 3 நோயாளிகள் பலி!
மருத்துவமனைவார்டில் ஏற்பட்ட தீ விபத்துக்கும் 3 நோயாளிகள் இறந்ததுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திலிருந்து அடர்த்தியான புகை வருவதைக் கண்ட நோயாளிகள், அவர்களைச் சுற்றி இருந்தவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் திகைத்துப் போனார்கள். அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்திற்குள் உள்ள யுபிஎஸ் அறையில் இருந்து புகை வெளியேறுவதைக் காண முடிந்தது. செய்தி சேனல்களில் காட்டப்பட்ட காட்சிகள் நோயாளிகளை ஸ்ட்ரெச்சர்களில் வெளியே கொண்டு சென்று ஆம்புலன்ஸ்களில் அழைத்துச் செல்வதைக் காட்டின.
தீ விபத்தில் மூச்சுத் திணறி மூன்று நோயாளிகள் இறந்ததாக எம்.எல்.ஏ டி. சித்திக் குற்றம் சாட்டிய போதிலும், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் அந்தக் கூற்றுக்களை நிராகரித்தார். ஊடகங்களுக்கு பேட்டி அள...









