Thursday, March 19பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

Author: daya.anand.s

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு, முக்கிய செய்தி
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், இன்று (மே 28) தீர்ப்பு வெளியிடப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு சட்டம் (POCSO) சிறப்பு நீதிமன்றம், தி.மு.க. பிரமுகர் ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்துள்ளது. தண்டனை விவரம் வரும் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இரவு, அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் அருகே வந்து, இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 37 வயதான ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தி.மு.க.வின் பிரமுகர் என தெரியவந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக...
5வது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உள்நாட்டில் தயாரிக்கும் இந்திய அரசின் திட்டம்.

5வது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உள்நாட்டில் தயாரிக்கும் இந்திய அரசின் திட்டம்.

பாரதம்
இந்தியாவின் வான்வழிப் போர் திறனை மேலும் வலுப்படுத்தவும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியாவின் ஐந்தாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாகும் உள்நாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான "செயல்படுத்தல் மாதிரியை" இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாயன்று அங்கீகரித்தார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே F-22 ராப்டார், F-35 லைட்னிங் II மற்றும் Su-57 போன்ற ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் உள்ளன. தேஜாஸ் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் (LCA) உடன் இணைந்து AMCA, வரும் தசாப்தங்களில் IAF இன் முதுகெலும்பாக அமைகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், சிறந்த சூழ்நிலை விழிப்புணர்வு, மேம்பட்ட சென்சார்கள் மற்றும் ஒருங்கிணைந்த போர் நெட்வொர்க் திறன்களுக்கு பெயர் பெற்றவை. அவை ஆஃப்டர்பர்னர்களைப் பயன்படுத்தாமல் சூப்பர்...
இறுதி கட்ட சோதனையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றக் கூடிய மருந்து.

இறுதி கட்ட சோதனையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றக் கூடிய மருந்து.

ஆரோக்கியம், முக்கிய செய்தி
மனித பரிசோதனையின் இறுதி கட்டத்திற்குள் ஒரு புதிய உயிர்காக்கும் ஆண்டிபயாடிக் நுழைந்துள்ளது. "ஜோசுராபால்பின்", என்றழைக்கப்படும் இந்த மருந்து மில்லியன் கணக்கானவர்களைக் காப்பாற்றக்கூடும். நிமோனியா மற்றும் செப்சிஸ் போன்ற கடுமையான நோய்த்தொற்றுகளுக்கு எதிராக இந்த சோதனையை முன்னோக்கி எடுத்துச் செல்வதாக சுவிஸ் மருந்து தயாரிப்பாளர் ரோச் கூறினார். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அசினெடோபாக்டர் பாக்டீரியாவை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றன. மேலும் அதற்கு எதிர்வினையாற்றும் எந்தவொரு ஆண்டிபயாடிக் மருந்தும் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த "ஜோசுராபால்பின்" சோதனை மருந்து இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அங்கீகரிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த மருந்தின் இறுதி கட்ட சோதனை உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 400 நோயாளிகளுடன் ஒரு ஆய்வாக இருக்கும். "பொது...
உக்ரைனின் சுமி பகுதியில் 4 கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

உக்ரைனின் சுமி பகுதியில் 4 கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

உலகம்
ரஷ்யா-உக்ரைன் எல்லைக்கு அருகில் ஒரு "இடைநிலை மண்டலத்தை" உருவாக்கும் முயற்சியின் போது, ​​ரஷ்யப் படைகள் நான்கு கிராமங்களைக் கைப்பற்றியதாக வடகிழக்கு உக்ரைனின் சுமி பிராந்திய அதிகாரிகள் திங்கள்கிழமை பிற்பகுதியில் தெரிவித்தனர். சுமி பிராந்திய ஆளுநர் ஓலே ஹ்ரிஹோரோவ், தற்போது ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறிய நான்கு கிராமங்களை பட்டியலிட்டார் - நோவென்கே, பாசிவ்கா, வெசெலிவ்கா மற்றும் ஜுராவ்கா. அவர்களின் குடியிருப்பாளர்கள் நீண்ட காலமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உக்ரைனியப் படைகள், "சூழ்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார். வோலோடிமிரிவ்கா மற்றும் பிலோவோடிவ் உள்ளிட்ட பகுதியில் உள்ள மற்ற கிராமங்களைச் சுற்றி சண்டை தொடர்வதாக ஹ்ரிஹோரோவ் கூறினார். திங்கட்கிழமைக்கு முன்னதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இரண்டு கிராமங்கள் இ...
அமிர்தசரசில் குண்டுவெடிப்பு, போலீசார் தீவிர விசாரணை!

அமிர்தசரசில் குண்டுவெடிப்பு, போலீசார் தீவிர விசாரணை!

பாரதம்
அமிர்தசரஸ், பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் நேற்று முன்தினம் (மே 25) இரவு நடந்த வெடிகுண்டு சம்பவம் பொதுமக்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் கடுமையாக காயமடைந்த நிலையில், போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமிர்தசரசின் முக்கியமான பகுதி ஒன்றில் பல சத்தத்துடன் குண்டு வெடித்தது. சம்பவத்தின் போது அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பதற்றத்தில் சிதறியோடினர். இது திட்டமிட்ட தாக்குதலா? அல்லது விபத்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குண்டுவெடிப்பில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்ட போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய தகவல்களின்படி, காயம் அடைந்த நபர் தானே வெடிகுண்டை கையாள முயற்சித்துள்ளார் ...
மும்பையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை – ரயில், விமான சேவைகள் பாதிப்பு!

மும்பையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை – ரயில், விமான சேவைகள் பாதிப்பு!

பாரதம்
மஹாராஷ்டிராவில் கடந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மும்பையில் இடையறாத கனமழை பெய்து, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்று (மே 27) காலை 8.30 மணி வரை ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் நகரம் முடங்கியது நேற்று நள்ளிரவிலிருந்து தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்ததால், மும்பையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் குளங்களைப்போல் தேங்கிய மழைநீர், வாகன போக்குவரத்தை கடுமையாக பாதித்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்தது. ரயில்-விமான சேவைகள் பாதிப்பு மழைநீரால் ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. வோர்லி ...
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது: மே 27, 2025 அன்று, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் (ஒரிசா கடலோரம் அருகே) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது 48 மணி நேரத்துக்குள் மேலும் வலுப்பெறும் எனவும், தென்னிந்தியாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலெர்ட்: இடி, மின்னலுடன் கனமழை மே 27 (திங்கள்): தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று வேகம் மணிக்கு 40–50 கிமீ வரை வீச வாய்ப்பு. நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை. தேனி, தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகளில் மிக கனமழை ஏற்படக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய...
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி!

கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி!

தமிழ்நாடு
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாதங்கள் வளர்ச்சி அடைந்த குட்டி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்குப் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தி வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானை: மே 17ஆம் தேதி, கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் வழியெறிந்த நிலையில் நின்றுக்கொண்டிருந்தது. அதன் அருகில், அதற்குச் சொந்தமான குட்டி யானையும் பயமுடனும் பரிதாபமாகவும் நின்றுக்கொண்டிருந்தது. உடனடியாக தகவலறிந்த வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர். மருத்துவக் குழு போராடியப் பிறகும் உயிரிழப்பு : யானையின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வ...
தமிழ்நாடு அரசில் 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு.

தமிழ்நாடு அரசில் 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு.

தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தகவலின் பேரில், மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள "709 உதவி பொறியாளர்" பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு "மே 27, 2025 முதல் ஜூன் 25, 2025 வரை" ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிட விபரம்: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட 47 வகையான பதவிகளுக்காக 615 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மேலும் 94 பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்தமாக 709 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் கீழ் நிரப்பப்பட உள்ளன. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10, 2025 வரை நடைபெறும். தேர்வு கட்டணத்தை UPI வழியாக செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்ல...
“இது இந்தியா, ஹிந்தியில் மட்டும் தான் பேசுவேன்” : கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர் இடமாற்றம்.

“இது இந்தியா, ஹிந்தியில் மட்டும் தான் பேசுவேன்” : கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர் இடமாற்றம்.

பாரதம்
கர்நாடக மாநிலம் அனேகல் தாலுகாவின் எஸ்பிஐ வங்கி கிளையில், வாடிக்கையாளருடன் கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வங்கி மேலாளர் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலானது. இந்த விவகாரத்திற்கு காரணமான மேலாளரை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையை எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்தத் திடீர் நடவடிக்கையை கர்நாடக முதல்வர் சித்தராமையா பாராட்டியுள்ளார். தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் அவர் தெரிவித்ததாவது: “அனேகல் தாலுகா சூரிய நகர் எஸ்பிஐ கிளையின் மேலாளர், கன்னடத்தில் பேச மறுத்து வாடிக்கையாளரை அலட்சியமாக அணுகியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு எஸ்பிஐ எடுத்துள்ள விரைவான நடவடிக்கையை நாம் பாராட்டுகிறோம்,” என தெரிவித்துள்ளார். அதேசமயம், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாதெனவும், அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வே...