1,100 இந்தியர்கள் கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினர்.
தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம், நேற்று கத்தார் ஏர்வேஸ் விமானங்களில் சுமார் 1,100 இந்தியப் பயணிகள் புது தில்லி, மும்பை, கொச்சி மற்றும் பிற இடங்களுக்குப் பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு ஆலோசனையில், கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம், இந்த இடங்களுக்கு இன்றும் விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், கத்தார் ஏர்வேஸ் மார்ச் 18 முதல் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, சென்னை, தில்லி, ஹைதராபாத், கொச்சி, கோழிக்கோடு மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்கு விமானங்களை இயக்கும் என்றும் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
விமானங்களை முன்பதிவு செய்வதற்கும், சமீபத்திய விமானத் தகவல்களைப் பெறுவதற்கும், பயணிகள் கத்தார் ஏர்வேஸ் இணையதளம் அல்லது செயலியைப் பார்வையிடலாம் அல்லது ஒரு பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம் என்று இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. கத்தார் ஏர்வேஸ் விமானங்களில் இந்தியாவுக்குத...









