ஹோர்முஸ் நீரிணை மூடல்: இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பாதிப்பா?
உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதாக அறிவித்ததையடுத்து, எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இதனைக் தொடர்ந்து, இந்தியா போன்ற பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகள் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்குமா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் உருவாகியுள்ளன. ஆனால், தற்போதைய நிலவரப்படி, இந்தியாவுக்கு இதனால் உடனடி பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் எச்சரிக்கையும் அதன் தாக்கமும்அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி உற்பத்தி மையங்களை தாக்கியதையடுத்து, பதிலடி நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், உலக எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் 20% இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
இந்தியாவுக்கான சிக்கல்: எண்ணெய் வழித்தடம் அடைப்ப...









