நடுத்தர மக்களின் சொந்த வீட்டு கனவுக்கு உயிர் ஊட்டும் “புத்துயிர் நிதி”: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்
நாடு முழுவதும் வீடு கட்டும் கனவுடன் பாடுபடும் நடுத்தர வர்க்க மக்களின் நலனை பாதுகாக்க, நிறுத்தப்பட்டு நின்று போன கட்டுமான திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் “புத்துயிர் நிதி” அமைப்பை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
சொந்த வீடு என்பது, வரி செலுத்தி வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்த பணத்தை முதலீடு செய்யும் நடுத்தர வர்க்க மக்களின் மிகப்பெரிய கனவாகும். ஆனால், பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் பில்டர்கள் திட்டமிட்ட காலத்தில் வீடுகளை முழுதாக கட்டி முடிக்காமல் ஏமாற்றி வருவதால், ஏராளமான குடும்பங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
நீதிமன்றத்தின் உத்தரவு:
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா மற்றும் ஆர். மஹாதேவன் அடங்கிய அமர்வு வெளியிட்ட உத்தரவில்,
- மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது; வீடு வாங்குவோரி...









