பப்புவா நியூ கினி, மெக்சிகோ நாடுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுதந்திர தின வாழ்த்து!
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பப்புவா நியூ கினி மற்றும் மெக்சிகோ நாடுகளின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாடுகளின் மக்களுக்கும், வெளியுறவு அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பப்புவா நியூ கினி தனது 50வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்டின் ட்காட்சென்கோவுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜெய்சங்கர். சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பப்புவா நியூ கினிக்கு இந்தியா, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தேர்தல் ஆணையத்திற்காக 8,000 பாட்டில் அழியாத மை (Indelible Ink) பரிசளித்ததையும் அமைச்சர் நினைவுபடுத்தினார்.
மெக்சிகோ நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு வெ...









