பத்திரப்பதிவு விபரம், பட்டாவில் ஆதார் எண் சேர்க்க அரசு முடிவு.
தமிழகத்தில் நிலம், வீடு, மனை உள்ளிட்ட அசைவு இல்லா சொத்துகளை வாங்குபவர்கள், பத்திரப்பதிவுடன் சேர்த்து பட்டா மாறுதலுக்கும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, பட்டா மாறுதல் மற்றும் சொத்து உரிமை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வருவாய் துறை முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், விற்பனை பத்திர எண், சொத்தின் நான்கு எல்லைகள் தொடர்பான விபரங்கள், உரிமையாளரின் ஆதார் எண் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பட்டாவில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
தற்போது வழங்கப்படும் பட்டாவில் மாவட்டம், தாலுகா, கிராமம், நில உரிமையாளர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு மற்றும் நில வகைப்பாடு போன்ற அடிப்படை விபரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த பட்டா வடிவ...









