11வது தூதரகத் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி!
புது தில்லியில் ஏப்ரல் 28 முதல் 30 வரை வெளியுறவு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 11வது தூதரகத் தலைவர்கள் மாநாட்டில் திரு மோடி உரையாற்றினார். இந்த ஆண்டு மாநாடு, “2047-ஆம் ஆண்டுக்கான இந்திய ராஜதந்திரத்தை சீர்திருத்துதல்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தது.
வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலமும், வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான தொடர்பை ஆழப்படுத்துவதன் மூலமும் இந்தியாவின் உலகளாவிய ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தனது உரையில், பிரதமர் தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டதோடு, 2047-ஆம் ஆண்டுக்குள் ‘விக்ஷித் பாரத்’ இலக்கை அடைவதற்கான இந்தியாவின் ஈடுபாடு குறித்த வழிகாட்டுதலையும் வழங்கினார். எதிர்காலத்திற்குத் தயாரான செயலாண்மைத் திறம், 3T-க்களை (வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்று...









