
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் உருவாவது தவிர்க்க முடியாதது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப், பெர்சியன் வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி, இராணுவ ரீதியாக ஆற்றல் திரட்டிக்கொண்டிருக்கிறார்.
அத்துடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் மத்திய கிழக்கில் கடும் பதற்றம் நிலவுகிறது.
இந்த சூழலில், அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால்தான் அமெரிக்கா-ஈரான் மோதலைத் தவிர்க்க முடியும், இல்லையெனில் போர் வெடிக்கும் என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோயல் பாரட் தெரிவித்துள்ளார்.
“பிரான்சின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது – ஈரான் அணு ஆயுதங்களை பெறக்கூடாது. அதனை கட்டுப்படுத்துவதே எங்கள் முக்கிய முன்னுரிமையாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.