திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலைப் புதுப்பிக்க இந்தியா உதவும்: பிரதமர் மோடி
திருகோணமலையில் உள்ள மிகவும் மதிக்கப்படும் திருக்கோணேஸ்வரம் கோயிலின் புனரமைப்புக்கு இந்தியா உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கொழும்பில் தெரிவித்தார். அனுராதபுரம் மகாபோதி கோயில் வளாகத்தில் புனித நகரத்தை நிர்மாணிப்பதற்கும், நுவரெலியாவில் உள்ள சீதா எலிய கோயிலுக்கும் இந்தியா ஆதரவளிப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில், “இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக உறவுகள் உள்ளன. எனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆரவல்லி பகுதியில் 1960 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள், கண்காட்சிக்காக இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
“திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலின் புனரமைப்பில் இந்தியா உதவும். அனுராதபுரம் மகாபோதி கோயில் வளாகத்தில் புனித நகர...









