ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 3 பேர் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்
ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பேடன்-வுர்டெம்பெர்க் மாநிலத்தில் பயணிகளுடன் சென்ற ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளானது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததாகவும், 34 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகளை மிரளவைத்த திடீர் விபத்து
பிபெராச் (Biberach) மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த ரயில் இன்று காலை தண்டவாளத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் ரயிலின் பல பெட்டிகள் மரங்களில் மோதியதால், கடுமையாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை, மருத்துவ குழுவினர் மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
3 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்
இவ்விபத்தில் தற்போது வரை மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் காயமடைந்த நி...









