‘வேளாண் பயங்கரவாதம்’ (Agro Terrorism): இரண்டு சீன நாட்டினர் அமெரிக்காவில் கைது.
"நாட்டிற்குள் ஒரு ஆபத்தான நோய்க்கிருமியை" கடத்த முயன்றதாகக் கூறி இரண்டு சீன நாட்டினர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக FBI இயக்குனர் காஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
சீன நாட்டவர்களில் ஒருவர் யுன்கிங் ஜியான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக படேல் கூறினார். ஜியான் "'ஃபுசாரியம் கிராமினேரம்' (Fusarium graminearum) எனப்படும் ஆபத்தான பூஞ்சையை(Fungus) மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு கடத்தியதாகக் கூறப்படுகிறது. ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தியதாகவும், சீனாவில் இந்த நோய்க்கிருமியின் மீதான பணிக்காக சீன அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெற்றதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட இரண்டாவது நபரின் விவரங்களை வெளிப்படுத்திய படேல், ஜியான் - ஜுன்யோங் லியுவின் காதலன் என்று கூறினார். லியு பொய் சொன்னதாகவும், பின்னர் டெட்ராய்ட் பெருநகர விமான நிலையம் வழியாக அமெரிக்காவிற்கு 'ஃ...









