வெம்பக்கோட்டை அகழாய்வில் பண்டைய காதணி மற்றும் சங்கு வளையல் கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வில், பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் தயாரிக்கப்பட்ட காதணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உள்ளிட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளதாக திரு. தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். பதிவில், "வெம்பக்கோட்டை அகழாய்வில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய காதணி, மணிகள், சங்கு வளையல்கள் போன்றவை கிடைத்துள்ளன. இந்தக் கண்டெடுப்புகள் நம் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையை மீண்டும் நிரூபிக்கின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 7) எக்ஸ் தள பக்கத்தின் முழு பதிவு:
"தமிழரின் வரலாற்றைத் தாங்கிப்பிடிக்கும் வெம்பக்கோட்டை!
நம் தமிழரின் மரபையும், பெருமையையும் பறைசாற்றும் விதமா...









