திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை படுகொலை செய்த பிரதான குற்றவாளி மணிகண்டன், என்கவுன்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறையிலும் பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக் குளம் பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோப்பொன்றை அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் வைத்துள்ளார். இங்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் (25) ஆகியோர் பணி செய்துவருகின்றனர். இவர்களுடன், மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் (30) சமீபத்தில் அந்த கிராமத்திற்கு வந்திருந்தார். முந்தைய இரவில் மது அருந்திய பின்னர், தந்தை, மகன்கள் ஆகிய மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அரிவாளுடன் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை பண்ணை மேலாளர் ரங்கசாமி, உடனடியாக குடிமங்க...









