Wednesday, August 20பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்ற வாசகத்துக்கு தமிழக ரியல் எஸ்டேட் ஆணையம் தடை!

‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்ற வாசகத்துக்கு தமிழக ரியல் எஸ்டேட் ஆணையம் தடை!

தமிழ்நாடு
வீடு மற்றும் மனை வாங்கும் பொதுமக்கள் ஏமாறும் வகையில், “நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்ற வாசகத்தை சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள் என்ற புகார்கள் அதிகரித்துள்ளன. இதை தொடர்ந்தே, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) அந்த வாசகத்தை தடை செய்யும் வகையில் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இனிமேல் வீடு அல்லது மனை விற்பனைக்கு விளம்பரம் செய்யும் போது, எந்த இடத்திலும் ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ (Terms and Conditions Apply) என்ற வாசகம் பயன்படுத்த அனுமதியில்லை என ஆணையம் தெளிவாக அறிவித்துள்ளது. இந்த வார்த்தையை பல நிறுவனங்கள், பின் தொடரும் மறைமுக கட்டணங்களை நியாயப்படுத்த ஒரு தலையாய கருவியாக பயன்படுத்துவதாகும். இத்தரமான வழிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது, அபராதம் விதிப்பது, உரிமம் ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைக...
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (Primary Health Centres - PHC) 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், மருத்துவர் அலட்சியத்தால் உயிரிழந்தக் குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் புதுப்பாக்கத்தை சேர்ந்த தேவமணி, தனது மகள் சுப்புலட்சுமி கடந்த 2021ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது, அவளை முருகேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்ததாக மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது சிகிச்சை வழங்கியபோது, அவரது மகளுக்கு தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை தொடர முடியாத நிலை காரணமாக, பெரிய மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டதால், அவளை ஆம்புலன்ஸில் கொண...
முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய் ஆகியோரது வீடுகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சென்னை முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டது. இதேபோன்று, சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் எமெயில்கள் வந்தன. அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையில் இவை அனைத்தும் புரளி என்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் ஸ்டாலின் மற்றும் விஜய் வீடுகளுக்கு மிரட்டல் சென்னை எழும்பூரில் உள்ள மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு**, நேற்று காலை 5.30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். அவர், “முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன” என கூறியதும், அழைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து, தகவல் தேனாம்பேட்டை மற்றும் நீலாங்கரை காவல் நி...
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு, மேட்டூர் அணை நிரம்பியது!

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு, மேட்டூர் அணை நிரம்பியது!

தமிழ்நாடு
காவிரி ஆற்றின் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் பெய்த பருவமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர கரையோர மக்களுக்கு கர்நாடக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியில் இருந்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஆற்றில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த ஜூலை 25ம் தேதி நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர்வரத்து ஒரு லட்சத்து 500 கனஅடியாக உள்ளது. கால்வாய்க்கு 500 கனஅடி நீர் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 500 கன...
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான எம்.பி.பி.எஸ். கல்வி கட்டணங்கள் நிர்ணயம்!

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான எம்.பி.பி.எஸ். கல்வி கட்டணங்கள் நிர்ணயம்!

தமிழ்நாடு
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களுக்கான (NRI) இடங்களுக்கு தனித்தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 4.35 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஆண்டுக்கட்டணம் தற்போது தமிழ்நாட்டில், சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,450 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் உள்ளன. இதில், 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் NRI ஒதுக்கீடு இடங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு இந்த ஆண்டுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக, நீதிபதி ஆர். பொங்கியப்பன் தலைமையில், மக்கள் நல்வா...
14 ஆண்டுகளுக்கு பின் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

14 ஆண்டுகளுக்கு பின் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

தமிழ்நாடு
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 14) அதிகாலை 5.30 மணியளவில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தை நோக்கி திரண்டனர். சமீபத்தில் ரூ.2.37 கோடி மதிப்பில் கோயிலில் திருப்பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜூலை 10ம் தேதியிலிருந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று மாலை 7ம் கால பூஜை நடைபெற்ற பின்னர், இரவில் மூலவர்களுக்கு காப்பு கட்டும் சடங்கும் நடந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பின்னர் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசம், மற்றும் அதிகாலை 3.45 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று முடிந்தது. அதன்பின், 4.30 மணியளவில் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் நிரப்பிய தங்க மற்றும் வெள்ளிக் குடங்கள், ...
மூடிய அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு: தமிழக அரசு நடவடிக்கை!

மூடிய அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு: தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாடு
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த மாதங்களில் மூடப்பட்டிருந்த அங்கன்வாடி மையங்களை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மூடப்பட்ட மையங்களை மீண்டும் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மூடிய மையங்கள் – காரணம் மற்றும் பின்விளைவுகள்:தமிழகத்தில் மொத்தம் 54,483 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை குழந்தைகளின் ஆரம்ப பராமரிப்பு மற்றும் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய சமூக நலத்திட்ட மையங்களாக விளங்குகின்றன. எனினும், கடந்த காலங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் குழந்தைகள் வரத்து குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் பல மையங்கள் இயங்காமல் இருந்தன. இந்த நிலையிலேயே, 2024-25ஆம் நிதியாண்டில் மட்டும் 501 மையங்கள் மூடப்பட்டன. இது பெற்றோர்களிடையே நம்பிக்கையை குலைத்ததோடு, குழந்தைகளின் அடிப்படை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளும் பாதிக்கப்...
தேனி நகராட்சி கமிஷனர் மற்றும் மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை!

தேனி நகராட்சி கமிஷனர் மற்றும் மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை!

தமிழ்நாடு
வருமானத்தை விட அதிகமாக ரூ.2.73 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்ததாக தேனி நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் அவரது மனைவி பிளாரன்ஸ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை போரூர் அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த ஏகராஜ் (வயது 58), 10 மாதங்களுக்கு முன் தேனி நகராட்சியின் கமிஷனராக பணியேற்றிருந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள இவர், முந்தைய காலகட்டங்களில் பல்வேறு நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது மனைவி பிளாரன்ஸ் (வயது 50) சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஏகராஜ் 1994ம் ஆண்டு எரிசக்தித் துறையில் தட்டச்சராக அரசு பணியில் சேர்ந்தவர். தொடர்ந்து 23 ஆண்டுகள் பணிப்புரிந்த பிறகு, 2017ம் ஆண்டு நகராட்சி கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் ...
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

தமிழ்நாடு
2025-ம் ஆண்டில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விளம்பரங்களில் எழுத்துரு அளவு, திட்டத்தின் முகவரி, வசதிகள் பற்றிய விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் பதிவு எண் மற்றும் QR குறியீட்டை விளம்பரங்களில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.  விளம்பரங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்: எழுத்துரு அளவு:விளம்பரங்களில் எழுத்துரு அளவு 12க்கு குறையாமல் இருக்க வேண்டும்.  திட்டத்தின் முகவரி:திட்டத்தின் முகவரியை திட்ட அனுமதியில் உள்ளபடியே தெரிவிக்க வேண்டும்.  வசதிகள்:திட்டத்தில் உள்ள அனைத்து வசதிகள் பற்றிய விவரங்களையும் முழுமையாக தெரிவிக்க வேண்டும்.  பதிவு எண் மற்றும் QR குறியீடு:ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் பதிவு எண...
கிராம உதவியாளர் பணிக்கு 2299 வேலைவாய்ப்புகள்!

கிராம உதவியாளர் பணிக்கு 2299 வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு
தமிழ்நாடு வருவாய்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர்களின் பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு கால முறை ஊதியம் ரூ.11,100/- ரூ.35,100/ என்ற ஊதியகட்டின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் வாரியாக மொத்தம் 2299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தினசரி பத்திரிக்கை விளம்பரம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பகத்திற்கு தெரிவித்தல், இதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிக்கை விளம்பரம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பகத்திற்கு 06.07.2025 தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் 04.08.2025 ஆகும். 02.09.2025 அன்று தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கு, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில், தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்ட...