Monday, October 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

“GST 2.0″ மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்”  புத்தகங்களை வெளியிட்டார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

“GST 2.0″ மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்” புத்தகங்களை வெளியிட்டார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தமிழ்நாடு
சென்னையில் 'உயரும் பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள்' என்ற தலைப்பில் வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் கூட்டு மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார். "செப்டம்பர் 3 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட விரிவான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், செயல்படுத்தப்பட்டவுடன், நாடு முழுவதும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்தியாவின் 1.4 பில்லியன் குடிமக்களை நேரடியாகப் பாதிக்கும். வரி குறைப்பு முடிவு அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி, ஜிஎஸ்டி விகிதங்களில் உள்ள அனைத்து மாற்றங்களும் தீபாவளிக்கு முன்பே நடைமுறைக்கு வரும், இது இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து பிரதமரால் சுட்டிக்காட்...
தேனியில் கண்ணதாசன் என்பவரின் தோட்டத்தில் ஆச்சரியம்: 6 அடி நீள முருங்கைக்காய்!

தேனியில் கண்ணதாசன் என்பவரின் தோட்டத்தில் ஆச்சரியம்: 6 அடி நீள முருங்கைக்காய்!

தமிழ்நாடு
பொதுவாக வீடுகளின் பக்கத்தில் வளர்க்கப்படும் முருங்கை மரங்களில் 1 முதல் 2 அடி நீளத்திற்கு மட்டுமே முருங்கைக்காய்கள் காய்க்கும். ஆனால், தேனியில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் தோட்டத்தில், ஆச்சரியமாக 6 அடி நீளத்திற்கு முருங்கைக்காய்கள் காய்த்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் இது பரவலாகி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே விவசாயி சக்கரபாணியின் தோட்டத்தில் 5 அடி நீள முருங்கைக்காய் காய்த்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் இஸ்ரேல் சொட்டுநீர் பாசன முறையைப் பயன்படுத்தி கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுடன் ஒட்டு வகை முருங்கையையும் சாகுபடி செய்து சிறந்த பலனைப் பெற்றார். ஆனால், இப்போது தேனியில் கண்ணதாசன் என்ற ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டு தோட்டத்தில் வளர்த்த முருங்கை மரம், சக்கரபாணியின் ச...
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித் தொகை, “அன்புக் கரங்கள்” திட்டம்.

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித் தொகை, “அன்புக் கரங்கள்” திட்டம்.

தமிழ்நாடு
பெற்றோர் இல்லாத மற்றும் பாதுகாவலர் இல்லாத குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு புதிய சமூக நலத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “அன்புக் கரங்கள்” எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 15) அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். மாதம் ரூ.2000 நேரடி நிதி உதவி இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக (Direct Benefit Transfer) வரவு வைக்கப்படும். காலம்: குழந்தை 18 வயதை அடையும் வரை இந்நிதி உதவி தொடரும். நோக்கம்: உணவு, கல்வி, உடல்நலம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதி ஆதரவு. கூடுதல் நன்மை: கல்வி செலவுகள் அனைத்தையும் தமிழக அரசு ஏற்று நடத்தும். யார் யார் விண்ணப்பிக்கலாம்? - பெற்றோரை இருவரையும் இழந்த குழந்தைகள். - பெற்றோரில்...
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை மழை நிலவரம் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டதாவது: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிகபட்சமாக தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் வல்லம், சென்னை மணலி புதுநகரில் தலா 9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் வத்தலை அணைக்கட்டு பகுதிகளில் தலா 7 செ.மீ., சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் தென் மாவட்டங்கள் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், பல இடங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - புதுச்சேரி மற்றும் கா...
நாளை இரவு முழு சந்திர கிரஹணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும் வானியல் அரிய நிகழ்வு!

நாளை இரவு முழு சந்திர கிரஹணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும் வானியல் அரிய நிகழ்வு!

தமிழ்நாடு
நாளை (7ம் தேதி) இரவு, இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் அரிய வானியல் நிகழ்வாக முழு சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது. இது சுமார் 85 நிமிடங்கள் நீடிக்கும் என வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். எப்போது, எப்படிப் பார்க்கலாம்? இரவு 8:58 மணி – சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். (இதனை வெறும் கண்களால் பார்க்க சிரமமாக இருக்கும்).இரவு 9:57 மணி – பகுதி கிரஹணம் துவங்கும். அப்போது, சந்திரன் பூமியின் கருநிழல் பகுதிக்குள் நுழையத் தொடங்கும். இதிலிருந்து கிரஹணத்தை எளிதாகக் காணலாம்.இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:33 மணி வரை – சந்திரன் முழுமையாக மறைந்து காணப்படும். இதுவே முழு சந்திர கிரஹணம்.அதிகாலை 1:26 மணி – சந்திரன் கருநிழல் பகுதிக்குள் இருந்து வெளியேறும்.அதிகாலை 2:25 மணி – புறநிழல் பகுதிக்குள் இருந்தும் முழுமையாக வெளியேறும். இத்தகைய நிகழ்வை பொதுமக்கள் வெறும் கண்களாலேயே பார்...
பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல் : தமிழக அரசியலில் பரபரப்பு!

பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல் : தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழ்நாடு
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுகவுக்கு எதிராக அதிமுக–பாஜக தலைமையில் மாநிலத்தில் மாபெரும் கூட்டணியை அமைக்க முயற்சிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. அந்த முயற்சிகளில் அமமுகவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்தது. எனினும், சமீபகாலமாக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கியிருந்தன. இந்நிலையில், அதிமுக உரிமை மீட்பு குழுவை தலைமை தாங்கி வரும் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), சில நாட்களுக்கு முன்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் கவனம் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, இன்று டிடிவி தினகரனும் அதிகாரப்பூர்வமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு, வரவிருக்கும் த...
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 2 நாள் தமிழ்நாடு பயணம்!

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 2 நாள் தமிழ்நாடு பயணம்!

தமிழ்நாடு
இந்தியா ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்தார். நேற்று நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இன்று ஜனாதிபதி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு பயணம் செய்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதையடுத்து, ஜனாதிபதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார். பின்னர் திருச்சியிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நகரில் டி...
தமிழக முதல்வரின் ஜெர்மன் முதலீட்டு பயணத்தின் வலுவான குறிப்பு!

தமிழக முதல்வரின் ஜெர்மன் முதலீட்டு பயணத்தின் வலுவான குறிப்பு!

தமிழ்நாடு
ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள், தொழில்களில் முதலீடு செய்து, தங்கள் சொந்த கிராமங்களில் கல்வியை ஆதரிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்தார். ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், சிறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் தமிழ்நாட்டிற்கு செயல்பாடுகளை விரிவுபடுத்த முடியும் என்றாலும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் தங்கள் நிறுவனங்களை மாநிலத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்க முடியும் என்று கூறினார். “உங்கள் சொந்த கிராமங்களை கவனித்துக் கொள்ளுங்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் கல்வி உதவியை முடிந்தவரை வழங்குங்கள்,” என்று அவர் கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர் மற்றும் அமெர...
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு(TET) கட்டாயம்!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு(TET) கட்டாயம்!

தமிழ்நாடு
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு:மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் (RTE Act, 2009) படி, 1 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய விரும்புவோர் தகுதித்தேர்வு (TET) எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஆசிரியர் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் சங்கம் கண்டனம்:தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்:கல்வி உரிமைச் சட்டத்தில் இல்லாத பிரிவை உச்சநீதிமன்றம் தனது 142-வது ...
மேட்டூர் அணை – இந்த ஆண்டில் 6வது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணை – இந்த ஆண்டில் 6வது முறையாக நிரம்பியது!

தமிழ்நாடு
சேலம் மாவட்டத்தில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். தமிழக விவசாயத்திற்கு உயிர் ஊற்றாக திகழும் இந்த அணை, நடப்பாண்டில் ஆறாவது முறையாக நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். சமீப நாட்களில் தமிழக – கர்நாடகா எல்லை மலைப்பகுதிகளில் பரவலாக பெய்த மழையால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகியது. இதன் விளைவாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இன்று காலை 6வது முறையாக மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவையும் எட்டியது. அணைக்கு வரும் நீர்வரத்து 31,854 கனஅடியில் இருந்து 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் சேமிக்கப்பட்ட நீர் அளவு உச்சத்தை எட்டிய நிலையில், 23,300 கனஅடி நீர் டெல்டா பாசனப்பகுதி மற்றும் கால்வாய்களில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பிய நிலையில், தா...