
சென்னையில் மொட்டை மாடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! மின்னல் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். விரிவான கட்டுரை!
சென்னையில் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியத்தில் 20 வயதான முகுந்தன் என்பவர் உயிரிழந்துள்ளார். மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் கடந்த வாரம் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பரின் வீட்டிற்குச் சென்று மொட்டை மாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார்.
2023-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் மின்னல் தாக்கி 2,560 பேர் உயிரிழந்தனர். இயற்கை சீற்றங்களால் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மின்னல் தாக்கினால் மிகக் கடுமையான காயங்கள் மற்றும் மரணம் ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) தெரிவிக்கிறது.
கடந்த மாதங்களில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்புகள்:
ஆகஸ்ட் 23: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை...