
தமிழ்நாடு அரசில் 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தகவலின் பேரில், மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள "709 உதவி பொறியாளர்" பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு "மே 27, 2025 முதல் ஜூன் 25, 2025 வரை" ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விபரம்: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட 47 வகையான பதவிகளுக்காக 615 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மேலும் 94 பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்தமாக 709 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் கீழ் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10, 2025 வரை நடைபெறும். தேர்வு கட்டணத்தை UPI வழியாக செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்ல...