புதிய காற்றழுத்த தாழ்வு – தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிப் உருவாகி வருவதால், பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மேல் உருவான இந்த தாழ்வு மண்டலம் நாளை வலுப்பெற்று, தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வழுத்தமாக மாற வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட தகவல்கள்:வடகிழக்கு பருவமழை செயல்பாட்டின் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று மதியம் வரை, திருநெல்வேலி மாவட்டத்தின் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியதன் விளைவாக, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 48 மணிநேரங்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசைக்கு...









