அரசு ஊழியர்கள் மருத்துவக் காரணத்தால் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது, உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
மருத்துவ காரணங்களைக் காட்டி அரசுப் பணியிலிருந்து ராஜினாமா செய்யும் ஊழியர்கள், ஓய்வூதியப் பலன்களைப் பெற தகுதியற்றவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அரசுப் பணியில் இருந்து விலகும் விதிமுறைகள் தொடர்பாக நீண்டநாளாக நிலவி வந்த குழப்பங்களுக்கு இந்தத் தீர்ப்பு தெளிவான விளக்கத்தை வழங்குகிறது.
மருத்துவ காரணங்களால் பணியை விட்டு விலகிய இரு அரசு ஊழியர்கள், தாங்கள் விருப்ப ஓய்வு (VRS) பெற்றவர்களாகக் கருதப்பட வேண்டும் என்றும், அதனால் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், டி. பரத சக்கரவர்த்தி மற்றும் சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, அரசுப் பணியில் இருந்து விலகுவதற்கான விதிமுறைகள் குறித்து ...








