
‘ககன்யான்’ சோதனை கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு திரும்ப வைக்கும் 'ககன்யான்' திட்டத்தின் சோதனை நடவடிக்கை, இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையால் நேற்று வெற்றிகரமாக நடப்பட்டது.
ககன்யான் திட்டம்இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிக்கட்ட பயிற்சியில் உள்ளனர். இந்த வீரர்கள், 'ககன்யான் க்ரூ மாட்யூல்' எனப்படும் சிறப்பு கலத்தில் விண்வெளிக்கு செல்கின்றனர். மூன்று நாட்கள் விண்வெளியில் இருந்து, கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பி கடலில் தரையிறங்கும்.
சோதனை நடவடிக்கைஇது தொடர்பான சோதனை நேற்று விசாகப்பட்டினம் கடலில் நடைபெற்றது. ராக்கெட்டின் மூலம் 'க்ரூ மாட்யூல்' 15 கி.மீ உயரத்திற்கு அனுப்பி, அங்கிருந்து அதை விடுவித்தனர்.
பூமியை நெருங்குவதற்கு சில கி.மீ தூரம் முன், 'க்...