சென்னை நகரில் கோகைன் விற்பனை கும்பல்!
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான பெரும் கும்பலை நுங்கம்பாக்கம் போலீசார் பிடித்த சம்பவம் சினிமா உலகத்தையும் law and order துறையையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த் (வயது 46) மற்றும் கிருஷ்ணா (வயது 47) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத் (33), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் (38), கானா நாட்டைச் சேர்ந்த ஜான் (38), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கெவின் (35) ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு ஆறு நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுத்துள்ளனர். அவர்கள் மூலம் சினிமா துறையில் புகழ்பெற்றவர்கள் உள்ளிட்ட பலருக்கு கோகைன் விநியோகிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கெவின் பரபரப்பை கிளப்பிய வாக்குமூலம்:காவலில் விசாரணை செய்யப்பட்ட கெவின், போலீசாருக்கு முக்கிய தகவல்களை வ...








