சி.பி.ஐ. விசாரணை கோரி த.வெ.க., வழக்கு – இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை.
ViviCam 6300
கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், விபத்து அல்ல, திட்டமிட்ட அரசியல் சதி எனக் கூறி, சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று த.வெ.க. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என, த.வெ.க. சார்பில் வழக்கறிஞர் அறிவழகன் தலைமையிலான சட்ட அணி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் பசுமை வழிசாலையில் வசிக்கும் நீதிபதி எம். தண்டபாணி அவர்களை நேற்று காலை நேரில் சந்தித்தது.
நீதிபதியை சந்தித்த அறிவழகன், “கரூரில் நடந்த சம்பவம் விபத்து போல தெரியவில்லை; அரசியல் நோக்கத்துடன் திட்டமிட்ட சதி போலவே உள்ளது. பிரசாரத்தின் போது கற்கள் வீசப்பட்டன, போலீசார் தடியடி நடத்தினர். எனவே, சி.பி.ஐ. அல்லது சிறப்பு ...








