சென்னையில் அதிகாலையில் கனமழை – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை முதலே வானம் கருமேகங்களால் சூழப்பட்டு, இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. திடீரென பெய்த இந்த மழையால் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.
பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின:நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டன. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் இயங்குவதற்கு சிரமம் ஏற்பட்டது.
மழை அளவுகள்:துரைப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.அடையாறு பகுதியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதனால், பல குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான சாலைகள், குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.
வானிலை மையம் அறிவிப்பு:சென்ன...









