அனில் அம்பானி மீது பெரும் பண மோசடி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை!
தொழிலதிபர் அனில் அம்பானி மீது பெரும் அளவில் பண மோசடி மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி – இரு வழக்குகள் பதிவு:சமீபத்திய விசாரணைகளின் போது, அனில் அம்பானி ரூ.17,000 கோடி பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இரண்டு தனித்தனியான வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதனையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டம் (PMLA) கீழ் அமலாக்கத்துறை (ED) தனி வழக்கை பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.
35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை:கடந்த மாதம், மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவங்களுடன் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில், வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை விரிவான சோதனைகளை நடத்த...









