பாரிஸில் நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் கலந்தாய்வுகள்.
நேற்று பாரிஸில் நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் வெளியுறவு அலுவலக கலந்தாய்வுகளுக்கு, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் மார்ட்டின் பிரையன்ஸ் ஆகியோர் இணைத் தலைமை தாங்கினர். இந்தக் கூட்டத்தின் போது, இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்களில், குறிப்பாக உறவுகளை சிறப்பு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவது தொடர்பாக, அடைந்த முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் விரிவான ஆய்வு மேற்கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு, பொருளாதாரப் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கு உள்ளிட்ட முக்கிய செயல்திட்டங்களையும் இரு தரப்பினரும் ஆய்வு செய்ததாக ...









