
ரஷ்யாவின் முக்கிய ராணுவ தளபதி யாரச்லாவ் மாஸ்காலிக் (Yaroslav Moskalik) பயணித்த காரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, அவரை கொன்றுள்ளது உக்ரைன். இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் தளபதியின் உடன் இருந்த அவரது தனிப்பட்ட பாதுகாவலர் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் ரஷ்யாவின் ராணுவ தலைமை நிலையத்திற்கு முன்பாக நேர்ந்திருக்கிறது. கொல்லப்பட்ட யாரச்லாவ் மாஸ்காலிக், ரஷ்ய படைகளால் உக்ரைனின் கேஷ் நகரைக் கைப்பற்றும் முக்கியமான திட்டங்களை உருவாக்கியவர். இதனால் அவருடைய மரணம், ரஷ்ய ராணுவத்திற்குப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உலக அரசியல் வட்டாரங்களில், இந்த தாக்குதல், வொலொடிமிர் செலன்ஸ்கியின் உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் செயல்திறனை பெரிதும் போற்றும் வகையில் பேசப்படுகின்றது.
தற்போது, மொஸ்கோவில் பாதுகாப்பு நிலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், உளவுத்துறை மற்றும் ராணுவம் அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
இதனை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன, கிழக்கு டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரில் ரஷ்யா 103 ட்ரோன்களை ஏவியதாகவும், இதில் ஒரு குழந்தை மற்றும் 76 வயது பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, அதன் மேயர் இஹோர் டெரெகோவ், பல தனியார் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறினார்.