Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழகத்தில் மார்ச் 31க்குள் விரல் ரேகை பதிவு செய்யாவிட்டால், காஸ் சிலிண்டர் கிடைக்குமா?

தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு 2.35 கோடி வீட்டு சமையல் காஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனங்கள் 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டரை சந்தை விலைக்கு விற்பனை செய்கின்றன, மேலும் மத்திய அரசு மானிய தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது.

இந்த மானிய திட்டத்தின் கீழ், பயனாளியின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிலிண்டர் இணைப்பு யாரின் பெயரில் உள்ளதோ, அவர்கள் காஸ் ஏஜன்சிக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதற்காக, விழி ரேகை அல்லது முகப்பதிவு மூலமும் சரிபார்ப்பு பதிவு நடைபெறுகிறது.

இந்த சரிபார்ப்பு பணியை முடிக்க மத்திய அரசு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை வாடிக்கையாளர்களில் வெறும் 50% பேர் மட்டுமே விரல் ரேகை பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், ஏப்ரல் முதல் விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு சிலிண்டர் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியன் ஆயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “பலர் இன்னும் விரல் ரேகை பதிவு செய்யவில்லை. எனவே, மார்ச் 31க்குப் பிறகும் வழக்கம்போல் சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கலாம்” என்று தெரிவித்தார்.