
2025 முதல் CA இறுதித் தேர்வுகள் இரண்டு முறைக்கு பதிலாக ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என்று ICAI வியாழக்கிழமை அறிவித்தது.
கடந்த ஆண்டு, இடைநிலை மற்றும் அடிப்படை (Intermediate and Foundation) பாடத் தேர்வுகளை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த ICAI முடிவு செய்தது, இப்போது CA இறுதித் (Final) தேர்வுகளும் அதைப் பின்பற்றும் என்று அது கூறியது.
“உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணங்கவும், மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும், ICAI இன் 26வது கவுன்சில் CA இறுதித் தேர்வை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்தது” என்று ICAI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.