இஸ்லாமாபாத் சென்றடைந்த ஈரான் பிரதிநிதிகள் – அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை தொடக்கம்.
ஈரான் பிரதிநிதிகள் பயணித்த விமானத்தில் நடந்த ஒரு நிகழ்வு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.விமானத்தின் இருக்கைகளில் போரில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள், இரத்தம் படிந்த பள்ளிப்பைகள், காலணிகள், மலர்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வு, “போரின் மனித விலையை உலகிற்கு காட்டும் ஒரு சின்னம்” என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பல வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்காவும் ஈரானும் இன்று இஸ்லாமாபாத்தில் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. அமெரிக்கத் தூதுக்குழுவிற்கு துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குவார். அவருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.
ஈரான் சார்பில் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கலந்துகொள்வார். உச்ச த...









