இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இஸ்ரேலிய நிதியமைச்சரை புதுதில்லியில் சந்தித்தார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று புதுதில்லியில் இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய்வது குறித்து விவாதித்ததாக திரு கோயல் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காக இஸ்ரேலும் இந்தியாவும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஸ்மோட்ரிச் மற்றும் இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரால் புது தில்லியில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டுகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "சைபர் பாதுகாப்பு, பாதுகாப்பு, புதுமை மற்றும் உயர் தொழில்நுட்பம்" ஆகியவற்றில் அதிக ஒத்துழைப்பின் அவசியத்தை சீதாராம...









