காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற 48 மணி நேரத்திற்கு பாதையை திறந்தது இஸ்ரேல்!
காசா நகரத்தை விட்டு வெளியேற பாலஸ்தீனியர்கள் பயன்படுத்தக்கூடிய பாதையைத் 48 மணி நேரம் கூடுதளாக திறப்பதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று கூறியது, ஏனெனில் நகரத்தில் பொதுமக்களை வெளியேற்றவும் ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகளை எதிர்கொள்ளவும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு, 2023 ஆம் ஆண்டு திடீர் ராணுவத் தாக்குதலை இஸ்ரேலின் மீது நடத்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இஸ்ரேல், காசா மீது விமானத் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்தின் மதிப்பீட்டின்படி, காசா நகருக்குள் சுமார் 3,000 ஹமாஸ் போராளிகள் தங்கி உள்ளனர். இதனால், "ஹமாஸ் கோட்டை" எனக் கருதப்படும் பகுதிகளைச் சூழ்ந்தே த...









