புக்கர் பரிசுக்கான பட்டியலில் இந்திய எழுத்தாளர் கிரண் தேசாய்
புக்கர் பரிசை வென்று கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக எந்த நாவலையும் வெளியிடாத இந்திய எழுத்தாளர் கிரண் தேசாய், தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய நாவலுக்காக மீண்டும் விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
உலக இலக்கியத்தில் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் புக்கர் பரிசுக்கான முதற்கட்ட பட்டியலில் இந்திய-அமெரிக்க எழுத்தாளர் கிரண் தேசாய் எழுதிய புதிய நாவல் "The Loneliness of Sonia and Sunny" இடம் பெற்றுள்ளது.
புகழ்பெற்ற எழுத்தாளராக இருப்பவர் கிரண் தேசாய், இதுவரை மூன்று நாவல்களை எழுதியுள்ளார். இவரது இரண்டாவது நாவல், "The Inheritance of Loss", 2006ம் ஆண்டு வெளியானதும், அந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை வென்று சர்வதேச கவனத்தை பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகு, அவர் எழுதிய மூன்றாவது நாவல் "The Loneliness of Sonia and Sunny" தற்போது வாசகர்களை அணுக உள்ள நிலையில், அது புக்கர் பரிசுக்...









