ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஏன் மேலோங்கி நிற்கிறது?
ஹோர்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக நடைமுறையில் மூடப்பட்டுள்ளது – இது உலகளாவிய எண்ணெய் சந்தைகளை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது – மேலும் இதற்கு ஒரு தெளிவான முடிவு தென்படவில்லை.
வளைகுடாவில் உள்ள கப்பல்கள் மீதான ஈரானின் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும், போக்குவரத்து அபாயத்தை போதுமான அளவு அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கும், உலகம் சார்ந்திருக்கும் பயிர்களை வளர்க்க உதவும் உரங்களுக்கும் முக்கிய வழித்தடமாக விளங்கும் இந்த குறுகிய நீர்வழிப்பாதையின் வழியாக கிட்டத்தட்ட அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதே நேரத்தில், மத்திய கிழக்குக்கு மேலும் ஆயிரக்கணக்...









