Monday, July 7பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பாரதம்

சைபர் அடிமைகளாக இருக்கும் தமிழர்கள்: சிறப்பு அறிக்கை!

சைபர் அடிமைகளாக இருக்கும் தமிழர்கள்: சிறப்பு அறிக்கை!

பாரதம்
தென் தமிழகத்தில் கணினி துறையில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பெரும்பாலும் வெளிநாடு சென்று வேலை செய்வதையே விரும்புகின்றனர். இவர்களை குறி வைத்து தூக்கும் கம்போடியா மற்றும் லாவோஸ் நாட்டில் உள்ள இணைய குற்றவாளி கும்பல். கணினி வேலை, கை நிறைய சம்பளம் என்று கூறி பல இளைஞர்களை கம்போடியா நாட்டிற்கு அழைத்துச் சென்று ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் அடிமைகளாக மாற்றி வருகின்றனர். வங்கி அதிகாரிகள் போல எப்படி பேச வேண்டும்; பங்கு சந்தை முதலீடுகளை ஈர்ப்பது போல, வாட்ஸாப்பில் எப்படி தகவல் அனுப்ப வேண்டும்; சிக்கிய நபர்களை சிந்திக்க விடாமல் எப்படி மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்பது குறித்து, அவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கின்றனர். பாஸ்ப்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு பணி அமர்த்தப்படும் இந்த இளைஞர்கள் வேலை செய்ய மறுத்தால் பட்டினி போட்டும், உடலில் மின்சாரம் பாய செய்தும் சித்ரவதை ச...
பிரியங்கா காந்தி ‘பாலஸ்தீனம்’ பொறிக்கப்பட்ட பையை பாராளுமன்றத்தில் எடுத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

பிரியங்கா காந்தி ‘பாலஸ்தீனம்’ பொறிக்கப்பட்ட பையை பாராளுமன்றத்தில் எடுத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

பாரதம்
திங்கள்கிழமை (டிசம்பர் 16) பாலஸ்தீனியர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், "பாலஸ்தீனம்" என்று பொறிக்கப்பட்ட பையை நாடாளுமன்றத்திற்குள் ஏந்திச் சென்றார் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி. காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பி, பாலஸ்தீனியர்களுடன் தனது ஆதரவை காட்டி வருகிறார் எம்பி பிரியங்கா காந்தி. "பாலஸ்தீனம்" என்ற வாசகமும், தர்பூசணி பொறிக்கப்பட்ட பாலஸ்தீனிய சின்னங்களும் அடங்கிய கைப்பையை காந்தி கையில் வைத்திருந்தார். பாலஸ்தீன ஒற்றுமையின் அடையாளமாக தர்பூசணி பார்க்கப்படுகிறது....
மூட நம்பிக்ககையால் உயிருள்ள கோழி குஞ்சை விழுங்கிய 35 வயதுடைய ஆண் உயிரிழப்பு ; பறவை உயிருடன் மீட்கப்பட்டது.

மூட நம்பிக்ககையால் உயிருள்ள கோழி குஞ்சை விழுங்கிய 35 வயதுடைய ஆண் உயிரிழப்பு ; பறவை உயிருடன் மீட்கப்பட்டது.

பாரதம்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், 35 வயதுடைய நபர் ஒருவர் உயிருள்ள கோழி குஞ்சு ஒன்றை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறவை, விந்தையாக, உயிர் பிழைத்தது. அம்பிகாபூரில் நடந்த சம்பவம் உள்ளூர் சமூகத்தையும் மருத்துவ நிபுணர்களையும் திகைக்க வைத்தது, கிராமவாசிகள் இந்த வினோதமான செயலுக்கு மூடநம்பிக்கைகள் காரணம் என்று கூறினர். ஆனந்த் என்ற அந்த நபர் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் குழந்தை பிறப்பதற்காக உள்ளூர் 'தந்திரி'யுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், உயிருள்ள குஞ்சுகளை விழுங்குவது ஒரு தந்தையாக வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சடங்கின் ஒரு பகுதியாகும் என்றும் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையின் போது, ​​ஆனந்தின் உடலில் குஞ்சு உயிருடன் இருப்பதை டாக்...
பிச்சைக்காரர்களுக்கு காசு தந்தால் சிறை தண்டனை!

பிச்சைக்காரர்களுக்கு காசு தந்தால் சிறை தண்டனை!

பாரதம்
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில், ஜனவரி 1, 2025 முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுப்பவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று டிசம்பர் 16 திங்கட்கிழமை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் . “பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாதம் (டிசம்பர்) இறுதி வரை நகரத்தில் நடைபெறும். ஜனவரி 1ம் தேதி முதல் பிச்சை கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும்,'' என்றார். பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுக்க வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை சிங் வலியுறுத்தினார், "இந்தூரில் வசிப்பவர்கள் அனைவருக்கும் ப...
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார்!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார்!

பாரதம்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்ற பின்னர் முதலாவது சர்வதேச பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திங்கட்கிழமை டெல்லியில் சந்தித்தார். புதுடெல்லியில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இலங்கை அதிபர் திசாநாயக்க கூறியதாவது: "எங்கள் நிலத்தை எந்த வகையிலும் இந்தியாவின் நலனுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய பிரதமரிடம் உறுதி அளித்துள்ளேன்". புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திஸாநாயக்க, “இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக மேலோங்கி செழிக்கும், இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்றார்....
விஜய் திவாஸ் 2024!

விஜய் திவாஸ் 2024!

பாரதம்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 அன்று கொண்டாடப்படும் விஜய் திவாஸ், இந்தியாவின் மிக முக்கியமான இராணுவ வெற்றிகளில் ஒன்றாகும். இந்த நாள் 1971 போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை நினைவுபடுத்துகிறது, இது வங்காளதேசத்தை உருவாக்க வழிவகுத்தது மற்றும் நீதி மற்றும் அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது. விஜய் திவாஸ் என்பது ஒரு வரலாற்று இராணுவ வெற்றியை நினைவுகூருவது மட்டுமல்ல; இது இந்திய படைகளின் தைரியம் மற்றும் தியாகதின் சிறப்புகளை போற்றும் நாள். ஜனநாயத்தை பாதுகாப்பதிலும், ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்பதிலும், தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இந்த நாள் நினைவுபடுத்துகிறது. பாரதப் பிரதமர் திரு.மோடி தனது X வலைப்பதிவில், "இன்று, விஜய் திவாஸ் 1971 இல் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம்...
இந்திய தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் ஹுசைன் 73 வயதில் காலமானார்!

இந்திய தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் ஹுசைன் 73 வயதில் காலமானார்!

பாரதம்
இந்திய தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். ஹுசைன், 73, இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் என்ற ஒரு அரிய நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக அவரது குடும்பதினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் ICU க்கு மாற்றப்பட்டார். ஹுசைனின் சகோதரி குர்ஷித் ஆலியா கூறுகையில், "சான் பிரான்சிஸ்கோ நேரப்படி மாலை 4 மணி அளவில் வென்டிலேஷன் இயந்திரம் அணைக்கப்பட்ட பிறகு அவர் மிகவும் நிம்மதியான முறையில் காலமானார்". ஹுசைனுக்கு அவரது மனைவி அன்டோனியா மின்னெகோலா மற்றும் அவரது மகள்களான அனிசா குரேஷி மற்றும் இசபெல்லா குரேஷி ஆகியோர் உள்ளனர். ஜாகிர் உசேன் 9 மார்ச் 1951 இல் பிறந்தார...
சிரியாவில் இருந்து 77 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

சிரியாவில் இருந்து 77 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

பாரதம்
மேற்காசிய நாடான சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த பஷார் அல்-அசாத் அதிபராக இருந்து வந்தார். கடந்த 13 ஆண்டுகளாக, அவருக்கும் பல கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே உள்நாட்டு போர் தொடர்ந்தது. சமீபத்தில், ஹயாத் தாஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சி குழுவின் தலைவன் அபு முகமது அல்-கோலானி தலைமையில், தலைநகர் டமாஸ்கஸ் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, தனி விமானத்தில் நாடு தாண்டி ரஷ்யாவில் தஞ்சமடைந்த பஷார் அல்-அசாதின் தப்புதல், சிரியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சிரியாவில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை முயற்சி செய்து வருகிறது. முதல்கட்டமாக, டில்லி விமான நிலையத்தில் வந்து சேர்ந்த 77 இந்தியர்கள், சிரியாவில் அனுபவித்த நிலையில் தொடர்பாக கருத்து பகிர்ந்தனர். "தெருக்களில் சமூக விரோதிகள் சுற்றித் திரிகிறார்கள்; அவர்...
‘ஒரே தேசம், ஒரே தேர்தல் மசோதா ஜனநாயக விரோதமானது’ – எதிர்க்கட்சிகள்!

‘ஒரே தேசம், ஒரே தேர்தல் மசோதா ஜனநாயக விரோதமானது’ – எதிர்க்கட்சிகள்!

பாரதம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தும் நரேந்திர மோடி அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் வியாழக்கிழமை கருத்து தெரிவித்தனர். இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் இதை வரவேற்ற வேளையில், எதிர்க்கட்சியின் பல தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். காங்கிரஸ் லோக்சபா உறுப்பினர் கே சுரேஷ் பேசுகையில், "எங்கள் கட்சி ஆரம்பத்திலிருந்தே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது, எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. நாங்கள் அதை எதிர்க்கிறோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் எதிர்க்கிறது," என்று அவர் கூறினார். இந்த மசோதாவை நாடாள...
பாக்., சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மீட்க நடவடிக்கை – வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

பாக்., சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மீட்க நடவடிக்கை – வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

பாரதம்
பாகிஸ்தான் சிறையில் உள்ள ஏழு தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர், 20ல் முதல்வர் ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்திற்கு பதில் அளித்து, ஜெய்சங்கர் கடிதம் அனுப்பியுள்ளார். "பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களின் இரண்டு படகுகளையும் விடுவிக்க, அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மீனவர்களுக்கு துாதரக அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாகிஸ்தான் அதிகாரிகள் அதை வழங்கவில்லை. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக, மீனவர்களுக்கு துாதரக அனுமதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை, அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல் நலனை உறுதி செய்ய வேண்டும் எனவும், பாகிஸ்தானிடம் கோரி...