கோல்ட்ரிஃப் உட்பட இந்தியாவில் 3 இருமல் மருந்துகளுக்கு எதிராக WHO எச்சரிக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் கலப்பட இருமல் சிரப்பை உட்கொண்டதால் பல குழந்தைகள் இறந்த சில வாரங்களுக்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியாவில் இதுபோன்ற மூன்று சிரப்களை அடையாளம் கண்டுள்ளது, மேலும் அது புழக்கத்தில் கண்டறியப்பட்டால் சுகாதார நிறுவனத்திற்குத் தெரிவிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகள் இறப்புக்குப் பிறகு சமீபத்தில் பெரும் எதிர்ப்பைத் தூண்டிய கோல்ட்ரிஃப்(Coldrif) சிரப், WHO எச்சரித்த மூன்று மாசுபட்ட சிரப்களில் ஒன்றாகும்.
பாதிக்கப்பட்ட மருந்துகளாக ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸின் கோல்ட்ரிஃப்(Coldrif), ரெட்னெக்ஸ் பார்மாசூட்டிகல்ஸின் ரெஸ்பிஃப்ரெஷ் டிஆர் (Respifresh TR) மற்றும் ஷேப் பார்மாவின் ரீலைஃப் (ReLife) ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம் அடையாளம் கண்டுள்ளதாக கூறியிருக்கிறது.
ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனமாகும், இதன் உ...









