எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் – பிரதமர் மோடி!
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார அழுத்தங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, "எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளின் நலன்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட அனுமதிக்க மாட்டேன்" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அகமதாபாதில் உரையாற்றிய பிரதமர்:குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அந்த நேரத்தில் அவர் கூறியதாவது:"இன்றைய உலக அரசியலில், ஒவ்வொரு நாடும் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு தங்கள் தீர்மானங்களை எடுத்து வருகின்றன. ஆனால், இந்த அகமதாபாத் மண்ணிலிருந்து நான் என் சிறு தொழில் முனைவோர் சகோதர சகோதரிகள், கடைக்காரர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அனைவரிடமும் உறுதியாகச் சொல்கிறேன் – உங்களின் நலன்களை காக்கும் கடமை எங்களுடையது. சிறு தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு எந்...









