நிலக்கரி இணைப்பு ஏலங்களுக்கான ‘கோல்சேது’ (CoalSETU) கொள்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பல்வேறு தொழில்துறைப் பயன்பாடுகள் மற்றும் ஏற்றுமதிக்காக நிலக்கரி ஒதுக்கீடுகளை ஏலம் விடுவதற்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கும் வகையில், வளத்திற்கான நியாயமான அணுகல் மற்றும் உகந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, 'கோல்சேது' கொள்கைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, தடையற்ற, திறமையான மற்றும் வெளிப்படையான பயன்பாட்டிற்கான நிலக்கரி ஒதுக்கீட்டு ஏலக் கொள்கைக்கு (கோல்சேது) நேற்று ஒப்புதல் அளித்தது. நேற்று மாலை புது டெல்லியில் அமைச்சரவையின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2016 ஆம் ஆண்டின் ஒழுங்குபடுத்தப்படாத துறை (NRS) ஒதுக்கீட்டு ஏலக் கொள்கையில் 'கோல்சேது' என்ற தனி சாளரத்தைச் சேர்ப்பதன் மூலம், எந்தவொரு தொழில்துறைப் பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கா...









