கேரளாவில் மூன்று புலிகள் மர்ம மரணம் – வனத்துறை தீவிர விசாரணை
கேரளா மாநிலத்தின் வயநாடு மற்றும் வைத்திரி வனப்பகுதிகளில் மூன்று புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று புலிகளின் உடல்களை மீட்டு தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வயநாட்டில் குறிச்சியாத் வனப்பகுதியில் இரண்டு புலிகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன. மற்றொரு புலி வைத்திரி பகுதியில் உள்ள காப்பி தோட்டம் அருகே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது. புலிகள் இயற்கையாகவே இறந்தனவா, அல்லது வேறு ஏதாவது காரணங்களால் உயிரிழந்தனவா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தனிப்படை விசாரணை தொடக்கம்
இந்த மர்மமான சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையான தகவல்களைச் சேகரிக்க, வனத்துறை அமைச்சர் சுசீந்திரன், எட்டு பேர் கொண்ட தனிப்படை குழுவை அமைத்துள்ளார். வன பாதுகாவலர் தீபா தலைமையில் செயல்படும் இந்த...









