Sunday, January 25பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

Author: daya.anand.s

ஃபெங்கல் புயல் நிலச்சரிவுக்குப் பிறகு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

ஃபெங்கல் புயல் நிலச்சரிவுக்குப் பிறகு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

தமிழ்நாடு
ஃபெங்கல் நிலச்சரிவுக்குப் பிறகு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு IMD மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த ஃபெங்கால் புயல், ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது, ஆனால் கனமழை மற்றும் வெள்ளம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் பல பகுதிகளைத் தொடர்ந்து தாக்கியது. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாலைகளில் இருந்து தாழ்வான பகுதிகளுக்கு பல வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள உத்தங்கிரி பேருந்து நிலையத்தில் பல பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் நீரில் மூழ்கியதால் பெரும் வெள்ளம் காட்சியளித்தது. சில பேருந்துகள் மற்றும் கார்கள் வேகமாக ஓடும் வெள்ளத்தில் மெதுவாக அடித்துச் செல்லப்படுவதையு...
இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி” – டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கை!

இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி” – டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கை!

உலகம்
ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் ஆகியவை ஒன்றிணைந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் அமைப்பாக கருதப்படுகிறது. கடந்த அக்டோபரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக தனிப்பட்ட பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கும் விஷயம் விவாதிக்கப்பட்டது. இதற்கான முயற்சிகள் பிரிக்ஸ் கூட்டமைப்பால் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸில் அவர் தெரிவித்துள்ளார்: "பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்க முயற்சித்தால், அவர்களுக்கு 100% வரி விதிக்கப்படும். அமெரிக்க பொருளாதாரத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக செயல்படும் எந்த நாடும் பொருளாதார ஒப்பந்தங்களில் இருந்து விலக ...
எச். ராஜாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு

எச். ராஜாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு

பாரதம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச். ராஜா மீது 2018 ஆம் ஆண்டு மார்சில் பெரியார் சிலை உடைப்பேன் என்ற கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவு செய்ததற்கும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள், கலவரம் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை ரத்து செய்ய கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம், வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க சி...
சட்டவிரோத விசா முறைகேடு: Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்! அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

சட்டவிரோத விசா முறைகேடு: Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்! அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

பாரதம்
Infosys நிறுவனம், சட்டவிரோதமாக தனது ஊழியர்களுக்கு விசாக்கள் வழங்கிய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், நிறுவனர் நாராயணமூர்த்தி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து வெளியிட்டதால் கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது இந்த விசா விவகாரம் வேகமெடுத்துள்ளது. அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதற்காக Infosys நிறுவனம் ரூ.238 கோடி அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது, அமெரிக்காவில் இந்திய நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்றாகும். Infosys, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். 22 நாடுகளில் கிளைகள் கொண்ட இந்நிறுவனத்தில் 1.4 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். விசா முறைகேடு விவரம்:அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக H-1B தொழில்விசா பெற வேண்டிய இடத்தில், Infosys, ...
திருவண்ணாமலை மண்ணில் மாட்டிய 7 பேரின் போராட்டம்.. மீட்புக்கு துரிதமாக செயல்படும் படையினர்!

திருவண்ணாமலை மண்ணில் மாட்டிய 7 பேரின் போராட்டம்.. மீட்புக்கு துரிதமாக செயல்படும் படையினர்!

தமிழ்நாடு
திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளனர். அவர்களை மீட்க, பேரிடர் மீட்புக் குழுவினருடன் 100க்கும் மேற்பட்டோர் இடைவிடாது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையை (தீபமலை) சுற்றி கடந்த 40 ஆண்டுகளாக 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன, இதில் 20,000க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. நேற்று மாலை 4.45 மணியளவில், திருவண்ணாமலை வ.உ.சி நகர், 11வது தெருவின் அருகே மண் சரிவு திடீரென ஏற்பட்டது. பெரிய சத்தத்துடன் பாறை சரிந்து, மண் மூழ்கியதால் 3 வீடுகள் பாதிக்கப்பட்டன. இதில், ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் மூழ்கியதாக தெரிய வருகிறது. சம்பவத்தின் போது,...
காற்றழுத்த மண்டலம் தற்போது எங்கு உள்ளது? எங்கே எங்கே மழை பெய்யும்? – வானிலை மையத்தின் புதிய தகவல்.

காற்றழுத்த மண்டலம் தற்போது எங்கு உள்ளது? எங்கே எங்கே மழை பெய்யும்? – வானிலை மையத்தின் புதிய தகவல்.

முக்கிய செய்தி
பெஞ்சல் புயல் கரையை கடந்தபின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்து நகர்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவை கடந்து, அரபிக்கடலுக்கு சென்ற பின்னரும் மீண்டும் காற்றழுத்த மண்டலமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது. புயல் பாதை வழியே இடங்களுக்கு மழை மற்றும் கனமழை அதிகம் இருக்கும் என்பதால், பொதுமக்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலாவுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது....