Tuesday, January 27பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

Author: daya.anand.s

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு நிவாரணம்!

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு நிவாரணம்!

தமிழ்நாடு
போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பரிவு தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அஜித்குமார் மாயமான நிலையில் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. அவரது மறைவால் குடும்பமே திடீரென துன்பத்தில் ஆழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுப்படி மாநில கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியகருப்பன் நேற்று நேரில் சென்று அஜித்குமார் குடும்பத்தினரிடம் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்போது அமைச்சர் பெரியகருப்பன் தமிழக முதல்வர் ஸ்டாலினை மொபைல் போனில் அழைத்து குடும்பத்துடன் பேச வைத்தார். முதல்வர் ஸ்டாலின் அஜித்குமாரின் தாய் மாலதியுடன் பேசினார். அப்போது அவர், “ரொம்ப சோர்வா இருக்காதீங்க...
மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘நீட்’ மீண்டும் தேர்வு நடத்த நீதிமன்ற உத்தரவு!

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘நீட்’ மீண்டும் தேர்வு நடத்த நீதிமன்ற உத்தரவு!

பாரதம்
நாடு முழுவதும் கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வின்போது, மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால், அப்பகுதியில் தேர்வு எழுத வந்த பல மாணவர்கள் பெரும் அவதியடைந்தனர். அந்த மையங்களில் வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டதாலும், தேர்வு நேரத்தை இழந்ததால், தங்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படக் கூடும் என்று மறு தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை நாடினர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 75 தேர்வர்கள் சார்பில், மத்திய பிரதேசம் உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பினரின் வாதங்களையும் நீதிபதி சுபோத் அபயங்கர் கவனத்துக்கு கொண்டு வந்து, தீர்ப்பு நேற்று வழங்கினார். தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:"மின்வெட்டு போன்ற காரணிகளால் தேர்வ...
ரயில்வே சேவைகளுக்கான ஒரே செயலி: ‘ரயில் ஒன்’ அறிமுகம்!

ரயில்வே சேவைகளுக்கான ஒரே செயலி: ‘ரயில் ஒன்’ அறிமுகம்!

பாரதம்
இந்திய ரயில்வே துறை சார்பில், ரயில்வேயுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில், 'ரயில் ஒன்' (Rail One)' என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் பல்வேறு செயலிகளை தனித்தனியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நீங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை ரயிலில் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய, முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் எடுக்க, நடைமேடை சீட்டுகள் பெற மற்றும் உணவு புக்கிங் செய்வது போன்ற பல்வேறு தேவைகளுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC), யு.டி.எஸ். (UTS) போன்ற தனித்தனி செயலிகளை பயணிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரே செயலியாக 'ரயில் ஒன்' உருவாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய செயலியின் வெளியீட்டு விழா, நேற்று டில்லியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொ...
அமெரிக்க டாலர் மதிப்பு அரை நூற்றாண்டில் இல்லாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலர் மதிப்பு அரை நூற்றாண்டில் இல்லாத வீழ்ச்சி!

உலகம்
அமெரிக்க டாலர் மதிப்பு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சர்வதேச நாணய சந்தைகளில், முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகளின் கரன்சி எதிரான டாலர் மதிப்பு கடந்த ஆறு மாதங்களில் 10 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுபோன்ற அளவிலான வீழ்ச்சியை கடந்தமுறை 1973ஆம் ஆண்டு தான் டாலர் சந்தித்திருந்தது. 1973 - ஒரு திருப்புமுனை1973-ஆம் ஆண்டு, அமெரிக்கா தங்க மதிப்புடன் இணைக்கப்பட்டிருந்த டாலர் முறையை ஒழித்தது. இதன் பின்விளைவாக, டாலரின் மதிப்பில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இப்போது, அதே அளவிலான வீழ்ச்சியை சந்தித்திருக்கும் டாலர் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டொனால்ட் டிரம்பின் மீண்டுவருதல் - ஒரு முக்கியக் காரணியாகும்?பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுவதாவது, அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதுதான் இந்த மாற்றங...
இந்தியாவின் அக்னி-5 : பதுங்குக் குழிகளை அழிக்கும் புதிய ஏவுகணை விரைவில்!

இந்தியாவின் அக்னி-5 : பதுங்குக் குழிகளை அழிக்கும் புதிய ஏவுகணை விரைவில்!

பாரதம்
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), மிக முக்கியமான முன்னேற்றமாக, மிக ஆழமான நிலத்தடியில் அமைந்த பதுங்கு குழிகளை அழிக்கும் வகையில் புதிய 'பங்கர் பஸ்டர்' (Bunker Buster) வகை ஏவுகணையை உருவாக்கி வருகிறது. இது, இந்தியாவின் ஏற்கனவே உள்ள அக்னி-5 ஏவுகணையின் புதிய வடிவமாகும். 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவும் சக்தி:இந்த புதிய ஏவுகணை, நிலத்தடியில் 80 முதல் 100 மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வெடிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சிமென்ட், கான்கிரீட் மற்றும் பாறை அடுக்குகளுக்குக் கீழே பதுங்கியிருக்கும் அணு ஆயுத உற்பத்தி நிலையங்கள், ராணுவ கட்டிடங்கள், உள்கட்டமைப்பு தளங்கள் ஆகியவற்றை அழிக்கும் வல்லமை உடையதாகும். இந்த ஏவுகணையின் முக்கிய அம்சங்கள்: போர்க் கப்பல்களில் ஏற்றி எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணையின...
8 மணி நேரம் முன்பே ரயில்வே ‘ரிசர்வேஷன் சார்ட்’.

8 மணி நேரம் முன்பே ரயில்வே ‘ரிசர்வேஷன் சார்ட்’.

பாரதம்
ரயில்வே பயணிகள் தங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை மற்றும் ஆசன ஒதுக்கீட்டு விவரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கான நடவடிக்கையாக, ரயில்வே அமைச்சகம் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே 'ரிசர்வேஷன் சார்ட்' வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஒரு ரயிலுக்கான முன்பதிவு அட்டவணை (Reservation Chart) ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது. இதனால், சில பயணிகள் தங்கள் இடம் உறுதி செய்ய முடியாமல், குழப்ப நிலை ஏற்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்கள் மற்றும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு, ரயில்வே வாரியம், முன்பதிவு சார்ட்டை மேலும் முன்கூட்டியே வெளியிட பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர...
உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுவதைத் தடுப்பது எப்படி (Preventing WhatsApp Hack)

உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுவதைத் தடுப்பது எப்படி (Preventing WhatsApp Hack)

தொழில்நுட்பம்
உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படுவதைத் தடுக்க கண்டிப்பாக இதை செய்யுங்கள். நீங்கள் இரண்டு-படி (Two-Step Verification) சரிபார்ப்பை இயக்க வேண்டும், இணைக்கப்பட்ட சாதனங்களைத் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும், மேலும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் மற்றும் செய்திகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் கைரேகை அல்லது முக ஐடியுடன் பயன்பாட்டு பூட்டை இயக்க வேண்டும் (Passkeys). மேலும் உங்கள் சரிபார்ப்புக் குறியீடு அல்லது பின்னை யாருடனும் பகிர வேண்டாம். இதோ இன்னும் விரிவான விளக்கம்: இரண்டு-படி சரிபார்ப்பு: வாட்ஸ்அப் அமைப்புகளில் இரண்டு-படி சரிபார்ப்பை இயக்கவும் (அமைப்புகள் > கணக்கு > இரண்டு-படி சரிபார்ப்பு Settings->Account->Two-Step verification). உங்கள் பின்னை மறந்துவிட்டால், மீட்டெடுப்பதற்காக வலுவான, தனித்துவமான பின்னை(PIN) உருவாக்கவும். உங்கள் பின் அல்லது சரிபார்ப்...
மத்தியப் பிரதேசம், யூனியன் கார்பைடு ஆலையில் 350 டன்  கழிவுகள் எரிக்கப்பட்டன.

மத்தியப் பிரதேசம், யூனியன் கார்பைடு ஆலையில் 350 டன் கழிவுகள் எரிக்கப்பட்டன.

முக்கிய செய்தி
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள செயலிழந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து 40 ஆண்டுகள் பழமையான 350 டன்களுக்கும் அதிகமான ரசாயனக் கழிவுகள் முழுமையாக எரிக்கப்பட்டுள்ளது. ராம்கி குழுமத்தின் பிதாம்பூர் தொழில்துறை கழிவு மேலாண்மை ஆலையில் அதிகாலை 1 மணியளவில் எரிப்பு செயல்முறை பாதுகாப்பாக முடிக்கப்பட்டதாக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய அதிகாரி ஸ்ரீனிவாஸ் திவேதி திங்களன்று செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்தார். விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட குப்பைக் கிடங்குகளில் சாம்பல் மற்றும் பிற கழிவுகளை புதைக்கும் செயல்முறை விரைவில் தொடங்கும் என்று அவர் கூறினார், மேலும் கழிவு எச்சங்கள் தற்போது சாக்குகளில் அடைக்கப்பட்டு ஆலையில் உள்ள கசிவு-தடுப்பு சேமிப்புக் கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. புதைப்பதற்கான குப்பைக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன, நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்ப...
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் : 72,943 பேர் பதிவு செய்துள்ளனர்

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் : 72,943 பேர் பதிவு செய்துள்ளனர்

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நோக்கி, விண்ணப்பங்கள் பதிவுசெய்யும் செயல்முறை ஜூன் 6ம் தேதி தொடங்கி, ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த காலக்கெட்டுக்குள் மொத்தம் 72,943 பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7.5% சிறப்பு ஒதுக்கீட்டுக்குள் மட்டும் 42,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் NEET (நீட்) மதிப்பெண்கள் பற்றிய தகவல்களை மத்திய அரசிடமிருந்து பெறும் பணிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில், கணினி மூலம் தரவரிசை (merit list) பட்டியல் தயார் செய்யப்படும். அதன் பிறகு விரைவில் அந்த பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிக...
உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாம் இடம், உக்ரைன் முதலிடம்!

உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாம் இடம், உக்ரைன் முதலிடம்!

பாரதம்
உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என சமீபத்தில் வெளியாகியுள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியா, தற்போதைய பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. அதன் முதலிடத்தை கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் கைப்பற்றியுள்ளது. ஆயுத இறக்குமதி நிலவரம் – 2020 முதல் 2024 வரை:ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் செயல்படும் SIPRI (Stockholm International Peace Research Institute) நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த சர்வதேச போக்குகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனம் 2020 முதல் 2024 வரை ஆயுத இறக்குமதியில் முன்னணியில் உள்ள 10 நாடுகளைப் பற்றிய புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளாவிய ஆயுத இறக்கு...