Wednesday, February 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

Author: daya.anand.s

400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை எலோன் மஸ்க் படைத்துள்ளார்!

400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை எலோன் மஸ்க் படைத்துள்ளார்!

உலகம்
400 பில்லியன் டாலர் (ஏறக்குறைய ₹33,938 கோடி) சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை எலோன் மஸ்க் படைத்துள்ளார். எலோன் மஸ்க் 400 பில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டியுள்ளார், இது SpaceX பங்கு விற்பனை மற்றும் டெஸ்லா பங்குகளின் எழுச்சியால் உந்தப்பட்டது. அவரது சொத்து ஒரே நாளில் $62.8 பில்லியன் அதிகரித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, எலோன் மஸ்க் தலைமையில் டெஸ்லாவின் பங்குகள் ஏறக்குறைய 65% உயர்ந்துள்ளன, பங்குகள் எல்லா நேரத்திலும் $415 ஐ எட்டியது. டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் சுய-ஓட்டுநர் கார்களுக்கான விதிமுறைகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் டெஸ்லாவின் போட்டியாளர்களுக்கு பயனளிக்கும் வரிக் கடன்களை அகற்றும் என்று முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்....
உலகளவில் பிரபலமான AI சாட்பாட் ChatGPT செயலிழப்பு!

உலகளவில் பிரபலமான AI சாட்பாட் ChatGPT செயலிழப்பு!

உலகம், தொழில்நுட்பம்
ChatGPT குறிப்பிடத்தக்க செயலிழப்பைச் சந்தித்து வருகிறது, உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்கள் chatbot ஐ இன்று பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ChatGPT ன் OpenAI நிறுவனம் சமூக ஊடகங்களில், “நாங்கள் இப்போது ஒரு செயலிழப்பை அனுபவித்து வருகிறோம். சிக்கலைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மன்னிக்கவும், நாங்கள் உங்களிடம் விரைவில் தெரியப்படுத்துவோம்!” என்று கூறியுள்ளனர். இன்றைய சூழலில் பலருக்கு ChatGPT இல்லாமல் பணி செய்வதே மிகவும் சிரமமாக உள்ளதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு பயனாளர், "நான் இப்படி ChatGPT வேலை செய்யாமல் இருப்பதற்காகவா ஒரு மாதத்திற்கு $20 செலுத்துகிறேன்? இன்றிரவு நான் ஒரு பணியை முடித்தாக வேண்டும்" என்று கூறியுள்ளார். இன்னொரு பயனாளர், “சீக்கிரம் சரி செய்யுங்கள், நான் இப்போது செத்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு Cha...
மழை காரணமாக 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மழை காரணமாக 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு
கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது. இதனால், இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, கீழ்க்கண்ட 16 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1. சென்னை 2. விழுப்புரம் 3. மயிலாடுதுறை 4. தஞ்சாவூர் 5. புதுக்கோட்டை 6. கடலூர் 7. திண்டுக்கல் 8.  ராமநாதபுரம் 9. காஞ்சிபுரம் 10. திருவாரூர் 11. அரியலூர் 12. செங்கல்பட்டு 13. ராணிப்பேட்டை 14. திருவள்ளூர் 15. திருவண்ணாமலை 16.கரூர்...
‘ககன்யான்’ சோதனை கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

‘ககன்யான்’ சோதனை கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

தொழில்நுட்பம், பாரதம்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு திரும்ப வைக்கும் 'ககன்யான்' திட்டத்தின் சோதனை நடவடிக்கை, இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையால் நேற்று வெற்றிகரமாக நடப்பட்டது. ககன்யான் திட்டம்இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிக்கட்ட பயிற்சியில் உள்ளனர். இந்த வீரர்கள், 'ககன்யான் க்ரூ மாட்யூல்' எனப்படும் சிறப்பு கலத்தில் விண்வெளிக்கு செல்கின்றனர். மூன்று நாட்கள் விண்வெளியில் இருந்து, கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பி கடலில் தரையிறங்கும். சோதனை நடவடிக்கைஇது தொடர்பான சோதனை நேற்று விசாகப்பட்டினம் கடலில் நடைபெற்றது. ராக்கெட்டின் மூலம் 'க்ரூ மாட்யூல்' 15 கி.மீ உயரத்திற்கு அனுப்பி, அங்கிருந்து அதை விடுவித்தனர். பூமியை நெருங்குவதற்கு சில கி.மீ தூரம் முன், 'க்...
சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கிலுக்கு ஐ.நா. உயர் விருது!

சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கிலுக்கு ஐ.நா. உயர் விருது!

பாரதம்
சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் (82) மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பிற்காக ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவையினால், ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருதான சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியராக மாதவ் காட்கில் இருக்கிறார். அவர் இந்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் தலைவராக இருந்தார். அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விருதைப் பற்றி கருத்து தெரிவிக்கும் மாதவ் காட்கில் கூறியதாவது:"சரியானவற்றிற்காக உறுதியாக நின்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு தயாரித்த அறிக்கை நேர்மையான மற்றும் தெளிவான கருத்துக்களால் நிரம்பியுள்ளது. இது மக்களுக்குப் புரிந்துக...
தொழிலதிபர் மெஹுல் சோக்சியின் 125 கோடி ரூபாய் சொத்துக்களை பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் பணியை, அமலாக்கத் துறை(ED) துவங்கி உள்ளது.

தொழிலதிபர் மெஹுல் சோக்சியின் 125 கோடி ரூபாய் சொத்துக்களை பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் பணியை, அமலாக்கத் துறை(ED) துவங்கி உள்ளது.

பாரதம், முக்கிய செய்தி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாடு தப்பிய தொழிலதிபர் மெஹுல் சோக்சியின் 125 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரித்துவழங்கும் பணியை அமலாக்கத்துறை (ஈ.டி.) தொடங்கியுள்ளது. 2014 முதல் 2017 வரை, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி, 13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பினர். இதில், நிரவ் மோடி 2019 முதல் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெஹுல் சோக்சியின் இருப்பிடம் கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருவரையும் நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மெஹுல் சோக்சி மட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,097.63 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்...
கனமழை எச்சரிக்கை; மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கை; மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு
கனமழை எச்சரிக்கையினால், மயிலாடுதுறையில் இன்று (டிசம்பர் 11) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகைக்கு அருகே கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. மாலை நிலவரப்படி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் நகர்வு மெதுவாக இருப்பதால், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதுச்சேரியிலும் இன்று மிதமான மழை, இடியுடன் பெய்யும் வாய்ப்பு ...
கர்நாடகா முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணா (92) காலமானார்

கர்நாடகா முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணா (92) காலமானார்

பாரதம்
மஹாராஷ்டிரா கவர்னராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய எஸ்.எம்.கிருஷ்ணா, 1932ல் பிறந்தார். பெங்களூருவை உலக வரைபடத்தில் இடம்பிடித்த பெருமைக்குரிய கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 92. வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த அரசியல்வாதி, பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2:45 மணியளவில் காலமானார். சில காலமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாண்டியா மாவட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது. கர்நாடக அரசும் 3 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. பெங்களூருவை தொழில்நுட்ப தலைநகராக மாற்றியதில் ஒரு முக்கிய நபரான திரு கிருஷ்ணா, மே 1, 1932 இல் மண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளியில் பிறந்தார். காங்கிரஸில் நீண்ட காலம் பணியாற்றிய அவர், தனது அரசியல் வாழ்க்...
ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்: விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளரை சஸ்பெண்ட் செய்தார் கட்சித் தலைவர் திருமாவளவன்!

ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்: விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளரை சஸ்பெண்ட் செய்தார் கட்சித் தலைவர் திருமாவளவன்!

முக்கிய செய்தி
ஆதவ் அர்ஜுனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்' அமைப்பின் சார்பில், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் நிலவும் மன்னராட்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மூவரின் தலைமையிலான நிர்வாகக் குழு, ஆதவ் அர்ஜுனாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில், ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த ஆதவ் அர்ஜுனா, ‘லாட்டரி மன்னன்’ சாண்டியாகோ மார்ட்டினின் மருமகன் ஆவார்....
இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் தகவல்!

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் தகவல்!

தமிழ்நாடு
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற மேலும் 24 மணி நேரம் ஆகலாம். அதன் பின்னர், தமிழகம் மற்றும் இலங்கை கரைக்கு அருகில் சென்றடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்கள் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று கனமழை குறித்த மஞ்சள் 'அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி மின்னலு...