பிரித்தானியாவின் உயரிய கவிதை விருதை பெற்ற இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன்!
லண்டன்: இலங்கைத் தமிழ் வம்சாவளியை சேர்ந்த இளம் கவிஞர் வித்யன் ரவீந்திரன் (Vidyan Ravinthiran), பிரித்தானியாவின் கவிதை உலகில் மிக உயர்ந்த பெருமை வாய்ந்த “Forward Prize 2025” என்ற விருதைப் பெற்றுள்ளார்.
வித்யன் ரவீந்திரன், இலங்கைத் தமிழ் தம்பதியருக்கு பிறந்தவர். அவர் பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட அவர், தனது படைப்பாற்றலால் உலக இலக்கிய வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.
இவ்வாண்டு “Forward Prize for Poetry” விருது, அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பான ‘அவித்யா’ (Avadhya) நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நூல், மனிதனின் உள்ளார்ந்த அடையாளம், புலம்பெயர்ந்தோரின் உணர்வுகள், மற்றும் மூன்று வெவ்வேறு நாடுகளில் பரவியுள்ள கலாச்சார அனுபவங்களை வெளிப்படுத்தும் சிறப்பான படைப்...









