பிச்சைக்காரர்களுக்கு காசு தந்தால் சிறை தண்டனை!
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில், ஜனவரி 1, 2025 முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுப்பவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று டிசம்பர் 16 திங்கட்கிழமை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் . “பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாதம் (டிசம்பர்) இறுதி வரை நகரத்தில் நடைபெறும். ஜனவரி 1ம் தேதி முதல் பிச்சை கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும்,'' என்றார். பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுக்க வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை சிங் வலியுறுத்தினார், "இந்தூரில் வசிப்பவர்கள் அனைவருக்கும் ப...