
ஆந்திரப் பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று கடலில் காணாமல் போயுள்ளது. அல்லாவரம் மண்டலத்தில் உள்ள ஓடலரேவு பகுதியிலிருந்து இம்மாதம் 3-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற இவர்கள், பத்து நாட்களுக்குள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவர்கள் திரும்பி வராததால், அவர்களது குடும்பத்தினர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். காணாமல் போன மீனவர்களைக் கண்டறியும் பணியில் கடலோரக் காவல் படை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு மாநில மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் கே. அச்சென்னாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்து கவலை தெரிவித்த துணை முதல்வர் கே. பவன் கல்யாண், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்குமாறும், தேடுதல் பணிகள் குறித்த தகவல்களை அவ்வப்போது காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
