Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

“தண்ணீர் பாயும் அல்லது அவர்களின் இரத்தம் பாயும்”, பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோவின் போர்க் குரல்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக இந்தியாவை வன்முறைக்கு தூண்டும் ஒரு ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தினார்.

‘எங்கள் தண்ணீர் அல்லது அவர்களின் இரத்தம்’ : ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பூட்டோ, “இந்த சிந்து நதியின் அருகே நின்று இந்தியாவிடம் சிந்து நதி எங்களுடையது, எங்கள் தண்ணீர் இந்த நதி வழியாகப் பாயும் அல்லது அவர்களின் இரத்தம் பாயும் என்று கூற விரும்புகிறேன்” என்றார்.

குறைந்தது 27 பேரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைத்தது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பூட்டோ மேலும் கூறினார், “இந்தியாவில் நம்மை விட அதிக மக்கள் தொகை இருக்கலாம், ஆனால் பாகிஸ்தான் மக்கள் துணிச்சலானவர்கள், நாங்கள் துணிச்சலான மக்கள். நாங்கள் உங்களுடன் துணிச்சலுடன் போராடுவோம். எல்லைகளில் எங்கள் குரல்கள் உங்களுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்கும்.”

அவர் மேலும் கூறினார், “இந்த நதி நம் அனைவருக்கும் சொந்தமானது. இது முழு பாகிஸ்தானுக்கும் சொந்தமானது. இந்த நேரத்தில் நமது எதிரியான நமது அண்டை நாடு நமது நதியின் மீது கண் வைத்துள்ளது. முழு பாகிஸ்தானும் ஒன்றுபட்டு அவர்களுடன் போராட வேண்டும்.”