Saturday, July 25பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அரசுக்கும் கரப்பாண்பூச்சி ஜனதா பார்ட்டி (CJP) அமைப்புக்கும் இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை.

தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த கோரிக்கைகள் தொடர்பாக, CJP பிரதிநிதிகள் குழுவுடன் அரசு இன்று(25.07.2026) மீண்டும் ஒரு கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேற்று(24.07.2026) புது தில்லியில் CJP பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தனர். இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு. நட்டா, தேர்வு முறை சீர்திருத்தங்கள் தொடர்பாக CJP முன்வைத்த கோரிக்கைகளைத் தாங்கள் பொறுமையுடன் கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.

CJP அமைப்பு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான சில சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்ததாகவும் திரு. நட்டா குறிப்பிட்டார்.