செங்கடலில் கேபிள் சேதம்: இந்தியா உட்பட ஆசியாவில் இணைய சேவை பாதிப்பு!
செங்கடல் கடலுக்கடியில் பதிக்கப்பட்டிருந்த இணைய கேபிள்கள் சேதமடைந்ததால், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் நேற்று (ஞாயிறு) இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆப்ரிக்கா–ஆசியாவை இணைக்கும் இந்தியப் பெருங்கடல் பாதையில், ஏமன் நாட்டை ஒட்டிய செங்கடல் பகுதி முக்கிய இடமாக உள்ளது. இந்த பகுதியில் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான நான்கு பிரதான இணைய கேபிள்கள் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், அல்காடெல்–லுசென்ட் நிறுவனம் சார்பிலும் இணைய சேவைக்கான கேபிள்கள் இதே பகுதியில் செல்கின்றன.
கடுமையான இணைய தடக்கம்:
இந்த கேபிள்கள் சேதமடைந்ததால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இணைய சேவை நேற்று முழுமையாக அல்லது பகுதியளவில் துண்டிக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகள், வீடியோ கான்பரன்ஸ்கள், நிதி பரிமாற்றங்கள், சர்வர் அடிப்பட...









