மார்ட்டின் லூதர் கிங் படுகொலை தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியீடு!
சிவில் உரிமைப் போராட்டத்தின் முன்னணி தலைவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் படுகொலைக்கு தொடர்பான எஃப்.பி.ஐ. மற்றும் சிஐஏ ஆகிய அமெரிக்க அரசின் முக்கிய பாதுகாப்பு அமைப்புகள் தயாரித்த 2.3 லட்சம் பக்கங்களை கொண்ட ரகசிய ஆவணங்கள் தற்போது பொது வெளியீட்டிற்கு வந்துள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள், 1977ஆம் ஆண்டு முதல் ஒரு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தன. தற்போது, நீண்ட வருடங்களுக்குப் பிறகு, முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன.
கிங் குடும்பத்தின் கண்டனம்
இவ்வாவணங்கள் வெளியீடு செய்யப்பட்டதற்கு, மார்ட்டின் லூதர் கிங் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கிங் ஜூனியரின் மகன்கள் மார்ட்டின் லூதர் கிங் III மற்றும் பெர்னிஸ் கிங் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"எங...









