பீஹார் துணை முதல்வரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு: மோடி கடும் எச்சரிக்கை.
பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் சர்ச்சைக்குரிய பேச்சு, இந்தியா – நேபாளம் இடையிலான உறவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல்வாதிகள் அடிக்கடி பல்வேறு கருத்துகளை வெளியிடுவது வழக்கமானது. ஆனால், சில சமயங்களில் அவர்கள் பேசும் வார்த்தைகள், நாட்டின் வெளிநாட்டு உறவுகளுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளது.
பா.ஜ. துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, "நேபாளம், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் அமைதி நிலைத்திருக்கும்; நேபாளம் தனி நாடாக ஆவதற்கு காங்கிரஸ் தான் காரணம்" என்று உரையாற்றினார். அவரது இந்தக் கருத்து, பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் கொந்தளிப்பு:இந்த உரையை கேட்ட பிரதமர் நரேந்திர மோடி கோபப்பட்டதாகக் கூறப்படுகிறது. "தேவை...









