உச்சநீதிமன்றத்தில் ஆஜரான தமிழக தலைமைச் செயலாளர் – தெருநாய்கள் கட்டுப்பாடு வழக்கு!
தெருநாய்கள் கட்டுப்பாடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட கடும் கண்டனத்தையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.முருகானந்தம் இன்று நேரில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.
தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காத மாநிலங்கள் மீது முன்பு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா தவிர்ந்த அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், நவம்பர் 3 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த அக்டோபர் 27 அன்று உத்தரவிடப்பட்டது.
மேலும், ஆஜராகாமல் விடுபட அனுமதி கேட்டு சில மாநிலங்கள் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனால், இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உட்பட பல மாநில தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜரானனர்.
தமி...









