உறுப்பு தானத்திற்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட உறுதிமொழிகள் பதிவு!
உறுப்பு மற்றும் திசு தானம் மூலம் உயிரைக் காக்கும் உன்னத முயற்சிக்கு, குடிமக்களிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வு, கருணை மற்றும் கூட்டு அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக, இந்தியா ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பு தான உறுதிமொழிகளைப் பதிவு செய்துள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், வாழ்வதற்கான மறுவாய்ப்பையும் அளிக்கும் ஒரு மகத்தான மனிதாபிமானச் செயலாக உறுப்பு தானம் கருதப்படுகிறது என்பதைப் பொதுமக்கள் உணர்ந்து வருவதையே இந்தச் சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தன்னார்வ உறுப்பு மற்றும் திசு தானத்தை ஊக்குவிப்பதிலும், தகவலறிந்த பங்கேற்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் ஏற்பட்டுள்ள ...









