
மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘நீட்’ மீண்டும் தேர்வு நடத்த நீதிமன்ற உத்தரவு!
நாடு முழுவதும் கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வின்போது, மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால், அப்பகுதியில் தேர்வு எழுத வந்த பல மாணவர்கள் பெரும் அவதியடைந்தனர்.
அந்த மையங்களில் வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டதாலும், தேர்வு நேரத்தை இழந்ததால், தங்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படக் கூடும் என்று மறு தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை நாடினர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 75 தேர்வர்கள் சார்பில், மத்திய பிரதேசம் உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பினரின் வாதங்களையும் நீதிபதி சுபோத் அபயங்கர் கவனத்துக்கு கொண்டு வந்து, தீர்ப்பு நேற்று வழங்கினார்.
தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:"மின்வெட்டு போன்ற காரணிகளால் தேர்வ...