இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மை இன்று கையெழுத்திடப்பட உள்ளது.
இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தவும், இரு தரப்புக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான அதிகாரப்பூர்வ அளவிலான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) முடித்துவிட்டதாக வர்த்தகத் துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட உள்ளது.
இந்தியாவின் கண்ணோட்டத்தில் இந்த வர்த்தக ஒப்பந்தம் சமநிலையானதாகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும் உள்ளது என்றும், இது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவின் சிறந்த பொருளாதார ஒருங்கிணைப்புக்கு உதவும் என்றும் அவர் கூறினார். இது இரு பொருளாதாரங்களிலும் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும் திரு. அகர்வால் மேலும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் நடத்தும் ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா உச்சி மாநாட்டின...









