இந்தியா மீதான 25% வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அன்று, இந்தியாவுடனான புதிதாக அறிவிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதல் உறுதியான நடவடிக்கையைத் தொடங்கினார். ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்கியதற்காக அவர் விதித்த 25 சதவீத வரியை அவர் நீக்கினார். இந்தியப் பொருட்கள் மீதான கூடுதல் 25 சதவீத வரியை நீக்குவதற்கான நிர்வாக உத்தரத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக நிலவி வந்த வர்த்தகப் பதட்டங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்ட நிர்வாக உத்தரவின்படி, "ரஷ்ய கூட்டமைப்பின் எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதியளித்துள்ளது". இந்தியா அமெரிக்கப் பொருட்களின் கொள்முதலை கணிசமாக விரிவுபடுத்த உத்தேசித்துள்ளது என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வ...









