“ஞாயிறு எதற்காக விடுமுறை? வீட்டில் மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்?”, எல் அண்டு டி., நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன்!
            "ஞாயிறு விடுமுறை எதற்காக?": எல் அண்டு டி தலைவர் சுப்ரமணியனின் கருத்து சர்ச்சையில்.
எல் அண்டு டி (லார்சன் அண்டு டூப்ரோ) நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியனின் சமீபத்திய கருத்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரமணியனின் கருத்து:சமீபத்தில் நடந்த நிறுவன ஊழியர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
"ஞாயிறு அன்றும் பணி செய்ய வைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் ஞாயிறு அன்றும் பணியாற்றுகிறேன். உலகில் முன்னணியில் நீடிக்க, வாரத்தில் 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும். வீட்டில் என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் உங்கள் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்?"
இந்த கருத்து, தனிப்பட்ட வாழ்க்கையை அவமதிப்பதாகவும், வேலைக்கு முன்னுரிமை கொடுக்கும் "நச்சுவேலை கலாசாரத்தின்" ஒரு உதாரணமாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் எதிர்ப்பு:சுப்ரம...        
        
    








